Home FamilyChapter 68

Chapter 68

by Siragugal Novels
10 views

ஆர்யனும் சஞ்சுவும் வீட்டிலேயே இருக்க ஆரம்பித்து இரண்டு வாரங்கள் கழிந்து போனது. ஆர்யன் வீட்டில் இருந்த அலுவலக அறையில் இருந்தே வேலை செய்தான், பிரதீப் சஞ்சுவின் சார்பாக வணிகத்தை கையாண்டான். இதற்கிடையில், சஞ்சு கர்ப்பத்தின் ஆரம்ப அறிகுறிகளை அனுபவிக்கத் தொடங்கினாள். காலையில் எழுந்ததும் தலை சுற்றல், வாந்தி ஒரு வழக்கமாக மாறியது, அவளால் எந்த உணவையும் உன்ன முடியாமல் தொடர்ந்து சோர்வாகவும் பலவீனமாகவும் உணர்ந்தாள்.

ஒவ்வொரு முறையும் அவள் பாத்ரூமுக்கு விரைந்து செல்லும் போது, ஆர்யன் அவளருகில் இருந்தான், கொஞ்சம் கூட அருவருப்பின் அறிகுறி இல்லாமல் அவளை மெதுவாக தூக்கினான். அவள் தலைமுடியைப் பிடித்து சுத்தம் செய்து, அவள் முதுகைப் பொறுமையாகத் தடவிக் கொடுத்தான், அவளுடைய வலியைக் குறைக்க மென்மையான வார்த்தைகளை முணுமுணுத்தான்.

அவளுக்கு வாந்தி வாராமல் இருக்கும் என்ற நம்பிக்கையில் அவர்கள் வெவ்வேறு உணவுகளை பரிசோதித்தனர். மாலை நேரங்களில், சுத்தமான காற்று உதவும் என்ற நம்பிக்கையில் ஆர்யன் அவளை தோட்டத்திற்கு அழைத்துச் சென்றான். சில நாட்களில், அவளுக்காக சமைத்து, கூடுதல் கவனத்துடன் உணவு தயாரிக்க முயற்சித்தான் ஆனால் அவளுக்குப் பிடித்த ஐஸ்கிரீம்கள் கூட அவளை ஆறுதல்படுத்தத் தவறிவிட்டன.

ஆர்யன் அவளை நினைத்து மிகவும் கவலைப்பட்டான். கர்ப்பத்தின் ஆரம்பத்தில் இந்த அறிகுறிகள் சாதாரணமானவை என்று அவன்  ஆன்லைனில் படித்திருந்தாலும், சஞ்சு கஷ்டப்படுவதைப் பார்ப்பது அவனது இதயத்தை எளிதாக்கவில்லை. ஒவ்வொரு முறை அவள் வாந்தி, மயக்கத்திற்கு பிறகும் அவள் முகம் வெளிறி சோர்வடைந்து காணப்பட்டது.

அவனது கவலையைக் கண்ட கௌசல்யா மெல்ல குறுக்கிட்டு,  “ஆர்யன் சார், அவள டாக்டர்கிட்ட கூட்டிட்டு போங்க. ஒருவேளை அவங்க வாந்தி நிறுத்த ஏதாவது மாத்திரை கொடுப்பாங்க “ என்று சொன்னார்.

அவரது ஆலோசனையை தீவிரமாக எடுத்துக்கொண்ட ஆர்யன் தனது தலைமை மருத்துவரை அழைத்து ஒரு மகப்பேறு மருத்துவரை தங்கள் வீட்டிற்கு வர ஏற்பாடு செய்தான்.

டாக்டர் வந்து சஞ்சுவை பரிசோதித்தபோது, அவளது கவலை தெளிவாகத் தெரிந்தது.

” இவங்க ரொம்ப பலவீனமாக இருக்காங்க. ஒழுங்கா சாப்பிடுறாங்களா?” என்று டாக்டர் கேட்டதும், அதற்கு பதிலளித்த ஆர்யன், “நாங்கள் எதிர்பார்த்தத விட சஞ்சுவுக்கு தலை சுற்றலும், வாந்தியும் மோசமா இருக்கு. சாப்பிட்ட உடனேயே வாந்தி எடுக்குறா ” என்று கூறினான்.

“கர்ப்ப காலத்துல இது சகஜம் தான், ஆனா இது ரொம்ப தீவிரமா இருந்தா, குமட்டல குறைக்க மாத்திரை பரிந்துரைக்குறேன். இவங்களுக்கு லேசான, சீக்கிரம் ஜீரணம் ஆகுற மாதிர் சாப்பாடு கொடுங்க. கண்டிப்பா நிறைய பழங்கள், காய்கறிகள் அப்புறம் கீரை சாப்பிடனும். அது கூட சேர்த்து நைட்டு குடிக்க ஒரு புரத சப்ளிமெண்ட் எழுதுறேன். அதையும் கொஞ்ச நாளைக்கு தினமும் கொடுங்க “ என்று மருத்துவர் பதிலளித்தார்,

சில குறிப்புகளை எழுதிவிட்டு, “அடுத்த வாரம், ஹாஸ்பிடல் கூட்டிட்டு வாங்க சார். குழந்தையோட வளர்ச்சியை சரிபார்க்க அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செய்யனும் “ என்று டாக்டர் சொல்ல, “ரொம்ப நன்றி டாக்டர். நான் வரப்போறத முன்கூட்டியே உங்களுக்கு தகவல் சொல்றேன் ” என்றான் ஆர்யன்.

” எப்போ வேணும்னாலும் நீங்க எனக்கு போன் பண்ணலாம் “ என்று அவர் விசிடிங் கார்டை அவனிடம் கொடுத்தார்.

மருத்துவமனைக்கு புறப்படுவதற்கு முன்பு ஆர்யன் அவருக்கு மனதார நன்றி தெரிவித்தான். மகப்பேறு டாக்டர், தலைமை டாக்டரிடம் சஞ்சுவின் பரிசோதனை குறித்து ரிபோர்ட் கொடுத்தார். இதற்கிடையில், அவரது வாகனத்தை பின்தொடர்ந்து வந்த ஒரு நபர் கார் விவரங்களை ராஜேஷிடம் கொடுத்தான், அவன் தகவலைக் கண்டுபிடித்த பிறகு, கார் ஆர்யனின் தலைமை மருத்துவருக்கு சொந்தமானது என்பதை உணர்ந்தான். தாமதிக்காமல் ராஜேஷ் மாயாவை அழைத்து ஆர்யனின் மேன்ஷனுக்கு டாக்டரின் வருகையை பற்றி தெரிவித்தான்.

ஆர்யன் மேன்ஷனில், சஞ்சு ஆர்யனின் நெஞ்சில் தலை சாய்த்து படுத்திருந்தாள், அவன் அவளது தலைமுடியை மெதுவாக வருடினான்.

“சஞ்சு மா, மாத்திர போட்டுட்டு ஏதாச்சும் சாப்பிடு டா, நீ ரொம்ப சோர்வா இருக்க “ என்று ஆர்யன் மெல்ல சொன்னதும், “ அப்புறம் சாப்பிடுறேன் ஆர்யன், ப்ளீஸ் “ என்று சிணுங்கினாள் சஞ்சு.

” மாத்திர போட்டா வாந்தி வராதுன்னு டாக்டர் சொன்னாங்க ஞாபகம் இருக்குல ? மாத்திர போடு மா, பாப்பாவுக்கு பசிக்கும்ல “ என்று ஆர்யன் மீண்டும் சொன்னான் ஆனால் சஞ்சு, “எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு ஆர்யன்…” என்று மிகவும் களைப்பாக பேசினாள்.

” சரி, நான் மாத்திரையும், சாப்பாடும் இங்க கொண்டு வரேன். நீ அப்படியே பெட்ல சாஞ்சு உட்காரு நான் உனக்கு ஊட்டி விடுறேன். சரியா ? “ என்று ஆர்யன் கேட்டதும், சஞ்சு சோர்ந்து தலையசைக்க, ஆர்யன் அவளை மெதுவாக கட்டிலில் சாய்ந்து உட்கார வைத்தான். மாத்திரையுடனும் ஒரு சிறிய உணவுடனும் திரும்பி வந்தவன், முதலில் அவளுக்கு மாத்திரையை கொடுத்துவிட்டு அதன் பின்னர் மெல்ல உணவை ஊட்டத் தொடங்கினான்.

“உனக்கு என்ன சாப்பிடணும்னு சொல்லு, நான் உனக்கு சமைச்சு தரேன் “ என்று ஆர்யன் கேட்டதும், “ எனக்கு மாங்கா வேணும்…” என்று கண்கள் பாதி மூடியபடியே சொன்னாள்.

“வெறும் மாங்காவா ? “ என்று ஆர்யன் கேட்க ஆம் என்று தலை அசைத்தாள் சஞ்சு.

“ சரி. இப்போ நீ ரெஸ்ட் எடு, நான் உனக்கு மாங்கா எடுத்துட்டு வரேன் “ என்று சொல்லி அவள் கன்னத்தில் மென்மையாக முத்தமிட்டு அவள் உறங்கும் வரை காத்திருந்தான். பின்னர், சமையலறைக்குச் சென்று, ஆர்யன் சில மாங்காய் மற்றும் மாம்பழம் அடிப்படையிலான உணவுகளை தயார் செய்தான். அளவான காரத்துடன் மாங்காய் சட்னி, இனிப்பு மற்றும் காரமான மாம்பழ சட்னி, மேலும் சில மாம்பழங்களை சாப்பிட வெட்டி தட்டில் வைத்தான்.

அவன் அறைக்கு திரும்பி வந்தபோது, அவள் இன்னும் தூங்கிக் கொண்டிருந்தாள், எனவே அவன் அமைதியாக சில அலுவலக வேலைகளை முடிக்க அமர்ந்தான். அவளுக்கு அவன் தேவைப்பட்டால் அவளுடன் நெருக்கமாக இருக்க விரும்பி அலுவலக அறைக்கு பதிலாக அவர்களின் படுக்கையறையில் வேலை செய்தான்

அன்று மாலை, ஆர்யன் அவளை தோட்டத்திற்கு அழைத்துச் சென்றான். அப்போது புதியதாக இனப்பெருக்கம் செய்திருந்த  பறவைகளைப் பார்த்துக் கொண்டிருந்த போது அவளைத் தனது மடியில் ஓய்வெடுக்க அனுமதித்தான். கூண்டில் சின்னஞ்சிறு குஞ்சுகள் கீச்சிட்டன, அவற்றைப் பார்த்து சஞ்சு புன்னகைப்பதைக் கண்ட ஆர்யனின் இதயம் கதகதப்பால் நிரப்பியது.

அன்று இரவு, அவன் தயாரித்த சட்னியுடன் சூடான தோசைகளை அவளுக்கு பரிமாறினான்.

“ஆர்யன்… இது செம்மையா இருக்கு, இதை நீ பண்ணியா ? “ என்று விரல்களை நக்கிக் கொண்டே கேட்டாள். கௌசல்யா சமையலறை வாசலில் இருந்து புன்னகைத்து, “சார் தான் சமைச்சாரு சஞ்சு, உனக்குப் பிடிச்சிருக்கா?” என்று கேட்டார். அதற்கு சஞ்சு, “ஹ்ம்ம்… ரொம்ப ரொம்ப ரொம்ப புடிச்சு இருக்கு ” என்று சொல்லி சட்னியை சுவைத்த ஆனந்தத்தில் கண்களை மூடி சுவைத்தாள்.

ஆர்யன் ஒரு திருப்தி அலை தன் மீது அடித்துச் செல்லப்படுவதை உணர்ந்தான். இறுதியாக அவளது பசியைத் தூண்டும் ஒன்றை அவன் தயாரிக்க முடிந்தது என்று நிம்மதியடைந்தான்.

அன்று இரவு, மருத்துவர் பரிந்துரைத்த புரத சப்ளிமெண்ட் அவளுக்கு கொண்டு சென்றான் ஆனால் சஞ்சு உடனடியாக முகத்தை திருப்பி மூக்கை பிடித்துக் கொண்டாள்.

” அய்யோ, எனக்கு வேணாம், இந்த வாசனையே புடிக்கல, எடுத்துட்டுப் போ ” என்று சஞ்சு சொன்னதும், ” சஞ்சு மா, உனக்கும், பாப்பாக்கும் வெயிட் அதிகமாக இத கண்டிப்பா குடிக்கணும்னு டாக்டர் சொல்லி இருக்காங்க, ப்ளீஸ் “ என்று சொன்னான் ஆர்யன்.

” முடியாது போடா ! எனக்கு அதோட வாசன கொஞ்சம் கூட புடிக்கல “ என்று சிணுங்கியபடியே போர்வையை தலைக்கு மேல் இழுத்து போர்த்திக் கொண்டாள்.

ஆர்யனால் அவளது சேட்டைகளைப் பார்த்து சிரிக்காமல் இருக்க முடியவில்லை. தோல்வியில் பெருமூச்சு விட்டவன், கோப்பையை ஓரமாக வைத்துவிட்டு, காலையில் டாக்டரிடம் மாற்று மருந்து கேட்க வேண்டும் என்று மனதில் குறிப்பெடுத்துக் கொண்டான்.

“சரி, குடிக்காத, ஆனா மாத்திரையாவது சாப்பிடு, அதுக்கு அப்புறம் நாம தூங்கலாம்.” என்று ஆர்யன் சொன்னதும், “ “தினமும் எவ்ளோ மாத்திர தான் நான் சாப்பிடுறது ? “ என்று முணுமுணுத்தபடி போர்வைக்கு அடியில் இருந்து எட்டிப் பார்த்தாள்.

“என் பாப்பாவுக்கும், நம்ம பாப்பாவுக்கும் நிறைய எனெர்ஜி வேணும் அதனால நீ வைட்டமின் மாத்திரைய தவறாம எடுத்துக்கணும். சரியா?” என்று ஆர்யன் சொல்ல, “நான் உனக்கு பாப்பாவா ? “ என்று கேட்டு உதட்டைப் பிதுக்கிக் கொண்டு கேட்டாள்.

ஆர்யன் அவள் தலைமுடியை மென்மையாக கோதிவிட்டபடி. ” ஹ்ம்ம் ஆமா, நீ என் பாப்பா, என் பொண்டாட்டி, என் காதலி, என் ஸ்வீட் ஹார்ட், என் தேவதை… என் செக்ஸி…” என்று சொல்லும் போதே, ” போதும், போதும், நிறுத்து உன் லிஸ்ட் பெருசா போகுது “ என்று சொல்லி சஞ்சு சிரித்தாள்.

ஆர்யன் சிரித்துக் கொண்டே மாத்திரைகளை அவளிடம் கொடுத்தான். அவள் மாத்திரை சாப்பிட்டதும் அவன் அவளருகில் படுத்து, அவளை மென்மையாக அணைத்து, அவள் நெற்றியில் மென்மையாக ஒரு முத்தமிட்டான்.

காலைச் சூரியன் திரைச்சீலைகள் வழியாக எட்டிப் பார்த்து அறை முழுவதும் மென்மையான ஒளியை வீசியது. ஆர்யன் வழக்கம் போல சீக்கிரமே எழுந்து சஞ்சுவுக்கு காலை உணவைத் தயாரிக்க அமைதியாக படுக்கையிலிருந்து நழுவினான். அவள் இன்னும் சிறிது நேரம் ஓய்வெடுக்க விரும்பி அவளை தொந்தரவு செய்யாமல் சென்றான்.

சிறிது நேரம் கழித்து கண் விழித்த சஞ்சு தன் கைகளை லேசாக நீட்டினாள், பின்னர் பக்கவாட்டில் திரும்பியபோது அவளுக்குப் பக்கத்தில் இருந்த இடம் காலியாக இருப்பதைக் கண்டதும், அவள் இதயம் நொறுங்கியது. அவள் முகத்தில் மெல்ல ஒரு சுளிப்பு தவழ்ந்தது, அவள் கண்கள் கலங்கின. முன்பைப் போலவே ஆர்யனைத் தன் அருகில் இருப்பான் என்று அவள் நம்பியிருந்தாள்.

ஏமாற்றத்துடன் படுக்கையிலிருந்து எழுந்து பாத்ரூமுக்குள்  நுழைந்தாள். சில நிமிடங்களுக்குப் பிறகு, அவள் உடலில் ஒரு துண்டு சுற்றிக் கொண்டு வெளியே வந்தாள். அப்போது, ஆர்யன் கையில் ஒரு தட்டுடன் அறைக்குள் நுழைந்தான்.

சஞ்சு அவனைப் பார்த்தாள் ஆனால் எதுவும் பேசாமல் அமைதியாக அலமாரி அறையை நோக்கி நடந்தாள். அவளது குளிர்ந்த மௌனத்தைக் கண்டு திகைத்துப் போன ஆர்யன் ஒரு கணம் அங்கேயே நின்றான். அவள் தயாராகி வருவதற்காக அவன் காத்திருந்தான், ஆனால் அவள் திரும்பி வராத போது, அவன்  அலமாரி அறைக்கு சென்றான்.

அந்த அறை அலங்கோலமாக இருந்தது. துணிகள் குவியல் குவியலாக தரையில் சிதறிக் கிடக்க, சஞ்சு டிரஸ்ஸிங் ஸ்டூலில் கைகளைக் கட்டிக்கொண்டு எரிச்சலான முகபாவனையுடன் உட்கார்ந்திருந்தாள்,

“சஞ்சு மா, என்ன ஆச்சு ?” என்று ஆர்யன் மெல்லக் கேட்டபடி அருகில் சென்றான் ஆனால் அவள் பதில் சொல்லவில்லை. அதற்குப் பதிலாக, அவள் தன் முகத்தை அவனிடமிருந்து திருப்பிக் கொண்டாள், அதை பார்த்து அவனுடைய புருவங்கள் குழப்பத்தில் சுருங்கின.

அவன் அவள் தோளில் கை வைத்தான் ஆனால் அவள் உடனே அதைத் தள்ளிவிட்டாள்.

” ஸ்வீட் ஹார்ட் என்னடி ஆச்சு ? “ என்று இந்த முறை அவளருகில் அமர்ந்து அவன் மீண்டும் கேட்டான். அதற்கு சஞ்சு ” ஒண்ணுமில்ல “ என்று பிடிவாதமாக முணுமுணுத்தாள்.

” அப்போ ஏன் இப்படி இருக்க ? ஏன் டிரஸ் எல்லாம் இப்படி கீழ போட்டு வெச்சுருக்க ? “ என்று சுற்றும் முற்றும் பார்த்தபடி கேட்டான்.

“ஒண்ணு கூட நல்லா இல்லை. எனக்கு இது எதுவும் பிடிக்கல ” என்று சொன்னவளின் குரலில் விரக்தி சொட்டியது.

ஆர்யன் மெல்லிய பெருமூச்சு விட்டான். ” ஏன் பொண்டாட்டி, ஒரு டிரஸ் கூட புடிக்கலையா ? சரி விடு,      உனக்கு என்ன டிரஸ், என்ன கலர்ல வேணும் சொல்லு, நான் ஏற்பாடு செய்றேன்” என்று சொன்னான். அதை கேட்டதும், “எனக்குத் தெரியல ” என்று அவள் மீண்டும் கைகளைக் கட்டிக்கொண்டவள் “ஆனா நான் உன் மேல கோவமா இருக்கேன். நீ போ, என்கிட்ட பேசாத.” என்றாள்.

அவள் வார்த்தையை கேட்டு ஆர்யன் திகைத்து கண் சிமிட்டினான். “ஏன் பேபி? நான் என்ன பண்ணேன் ?” என்று கேட்டான்.

“நீ மாறிட்ட, ஆர்யன்.” என்று சஞ்சு சொன்னதும், ஆர்யன் திகைப்புடன் அவளைப் பார்த்து, “சஞ்சு மா, என்னடி ஆச்சு ? நீ சொன்னா தானே எனக்குத் தெரியும்.” என்றான்.

“முன்னாடிலாம் நான் தூங்கி எந்திரிச்சா நீ என் பக்கத்துல இருப்ப ஆனா இப்போலாம் இருக்க மாட்டேங்குற. அப்புறம் இப்போ என் நெத்தியில மட்டும் தான் முத்தம் கொடுக்குற. இப்போ நான் உன் முன்னாடி  ஒரு துண்டு கட்டி இருக்கேன் ஆனா நீ எதுவும் ரியாக்ட் பண்ண மாட்டேங்குற. இதோ பாரு இவ்ளோ பக்கத்துல இருக்கேன் ஆனா உனக்கு ஒண்ணுமே தோணல. உனக்கு பாப்பா மேல மட்டும் தான் பாசம், என் மேல பாசம் எல்லாம் இப்போ இல்ல “ என்று சொல்லி சஞ்சு கைகளை உடலில் கட்டியணைத்து அழ ஆரம்பித்தாள்.

ஆர்யன் அவள் பேசியதை கேட்டு ஒரு கணம் வாயடைத்து நின்றான். இந்த தாழ்வுமனப்பான்மையின் அலை அவளைத் தாக்கும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. ஆனால் இப்போது, அவன் மனம் உடனடியாக அவர் படித்த கர்ப்ப கால கட்டுரைகளை நினைவுபடுத்தியது. கர்ப்ப காலத்தில் மனநிலை மாற்றங்கள், ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் குறித்தும் அவன் படித்தது நினைவுக்கு வந்தது. இதற்காக தன்னை தயார்படுத்திய கூகுளுக்கு அவன்  மனதளவில் நன்றி தெரிவித்தான்.

மெல்ல மூச்சை இழுத்து தன்னை சமாளித்துக் கொண்டு அவளை மெல்ல இழுத்து கண்ணாடி முன் நின்றான்.

” பொண்டாட்டி, கண்ணாடிய பாரு ” என்று ஆர்யன் சொன்னான் ஆனால் சஞ்சு, மாட்டேன் போடா “ என்று முணுமுணுத்தாள்.

அவன் அவள் தாடையைத் தொட்டு தூக்கி, பிரதிபலிப்பில் அவளுடைய கண்களைச் சந்திக்க அவளுக்கு வழிகாட்டினான்.

“இந்த உலகத்துல நான் ரொம்ப நேசிக்கிற, ஆசைப்படுற ஒரே பொண்ணு நீ மட்டும் தான். நமக்கு கல்யாணம் ஆன புதுசுல நான் எத்தன முறை பச்ச தண்ணியில குளிச்சேன்னு உனக்கு தெரியாது.   உன்ன தொடாம என் கைய கட்டி வெச்சுருக்க நான் எவ்ளோ கஷ்டப்பட்டேன் தெரியுமா ? நாள் முழுக்க உன்ன கட்டிபுடிச்சு முத்தம் கொடுத்து, உன் உயிர உறிஞ்சிக் குடிக்குற அளவுக்கு லவ் பண்ணிட்டே இருக்க என்னால முடியும்.” என்று ஆர்யன் சொன்னதும் சஞ்சுவின் உதடுகள் பிரிந்தன, ஆனால் அவன் தொடர்ந்தான்.

” எனக்கு உன்ன அவ்ளோ புடிக்கும், நான் உன்ன அவ்ளோ விரும்புறேன் ஆனா இப்போ நீ ரொம்ப பலவீனமா இருக்கே சஞ்சு. தெரியாம நாம ஹனிமூன் போன அப்போ நாம ரொம்ப காட்டுத்தனமா இருந்துட்டோம் அது கூட இப்போ உன் உடம்பு சோர்வா இருக்க ஒரு காரணமா இருக்கலாம். அதுவும் இல்லாம நாம நிறைய பயணம் பண்ணிட்டோம். அதனால தான் நான் உன் கிட்ட இருந்து என் கைகள விலக்கி வைக்குறேன், மத்தபடி எனக்கு உன்மேல லவ் இல்லனு அர்த்தம் இல்ல. உன்ன காயப்படுத்த முடியாத அளவுக்கு நான் உன்ன லவ் பண்றேன் இல்லனா உன்னால இப்போ ஒழுங்கா நிற்க கூட முடியாது தெரியும்ல ? இன்னும் கொஞ்ச நாள், நீ ஆரோக்கியமானதும் என்கிட்ட இருந்து தப்பிக்க முடியாது” என்று மெல்லிய புன்னகையோடு ஆர்யன் சொன்னான்.

“பொய் சொல்லாத, நான் கர்ப்பமா இருக்கேன். இப்போ எப்படி பண்ண முடியும் ? “ என்று சஞ்சு கேட்க, ஆர்யன் சிரித்தான். ” எப்படினு கேட்டா என்ன அர்த்தம் ? எப்பவும் போல தான். வேணும்னா புதுசா ஏதாச்சும் முயற்சி பண்ணலாம் “ என்று சொன்னான். உடனே சஞ்சு  அவன் மார்பில் ஒரு விளையாட்டுத்தனமான குத்து விட்டாள்.

” அய்யோ வலிக்குதுடி “ என்று ஆர்யன் சிணுங்க, “ நான் கர்ப்பமா இருக்கும் போது செய்யலாமானு கேட்டேன் “ என்று சஞ்சு அழுத்தமாக கேட்டாள். 

” அதுவா ? மேடம் ஆரோக்கியமா இருந்தா சூப்பரா பண்ணலாம் “ என்று சொல்லி ஆர்யன் அவள் மூக்கை பாசத்துடன் கிள்ளினான்.

பின் அவள் கன்னங்களை உள்ளங்கையில் பற்றி அவள் உதட்டில் முத்தமிட குனிந்தான். ஆனால் சட்டென்று பின்வாங்கியவன், அவளை மென்மையாக முத்தமிட்டான்.

” இப்போ என் மனச மாத்தாத அப்புறம் என்னால கண்ட்ரோல் பண்ண முடியாது. முதல்ல நீயும், நம்ம குழந்தையும் ஆரோக்கியமா இருக்கணும். அது தான் முக்கியம் மத்ததெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம் “ என்று சொன்ன ஆர்யன், “ இப்ப வெயிட் பண்ணு, நான் உனக்கு டிரஸ் எடுத்துட்டு வரேன்.” என்று சொல்லிவிட்டு தனது அலமாரிக்கு சென்று அவனது பெரிய டி-ஷர்ட்களில் ஒன்றையும் ஒரு ஜோடி டிராக் பேன்ட்டையும் வெளியே எடுத்தான்.

சஞ்சு ஒரு குழந்தையைப் போல சிரித்து, சட்டென உடை மாற்றி அவன் சட்டைக் காலரில் முத்தமிட்டு புன்னகையுடன் அவன் வாசனையை முகர்ந்தாள்.

“இந்த டிரஸ் உனக்கு ஓகேவா?” என்று ஆர்யன் கேட்க, “டபுள் ஓகே” என்றாள் சஞ்சு செல்லமாக. பின்னர் அவன் கையை பிடித்து ” அப்புறம் காலையிலேயே உன்ன வருத்தப்பட வெச்சதுக்கு மன்னிச்சிடு “ என்று சொன்னாள்.

ஆர்யன் அவளை இழுத்து அன்புடன் அணைத்து, அவள் நெற்றியில் முத்தமிட்டு, பின்னர் அவள் உதட்டை முத்தமிட்டான்.

“இப்ப வா. போய் ப்ரேக்ஃபாஸ்ட் சாப்பிடலாம்.” என்று சொல்லி தன்னுடைய கையை அவளைச் சுற்றி வைத்துக் கொண்டு, அவளை அறையை விட்டு வெளியே அழைத்துச் சென்றான். அவளுடைய மனநிலை இப்போது மென்மையாகிவிட்டது, அவனுடைய இதயம் அன்பால் நிரம்பியது.

***************

முன்னோட்டம்:

” நீ நான் சொல்றத கேட்கலானா, அப்புறம் நான் பார்ட்னர்ஷிப் ரத்து பண்ணி, பிசினஸ் மொத்தமா மூடிடுவேன் “

 

 

You may also like

Leave a Comment

Latest Posts

error: Content is protected !!