“ முதல் இரவு காட்சிகள் எந்த எல்லை வரை அனுமதிக்கப்படுகிறது என்று எனக்கு தெரியவில்லை. முடிந்த அளவுக்கு குறைத்து எழுதி இருக்கிறேன். நீங்க படித்த மற்ற கதைகளில் எல்லையின் அளவு பற்றி கமெண்ட் செய்தாள் இனி வரும் அத்தியாயங்களில் நான் கவனமாக இருப்பேன். முகம் சுளிப்பதாக இருந்தாள் அதற்கு வருந்துகிறேன். உங்கள் கருத்து என்னவாக இருந்தாலும் கமெண்ட் செய்தாள் மகிழ்ச்சி அடைவேன். நன்றி – தேவி சுப்ரமணியன் “
கேஷவ் குட் நைட் சொல்வதைக் கேட்ட மைரா கண்களை அகல விரித்து அவனைப் பார்த்தாள். ஒருமுறை எல்லா அலங்காரங்களையும் பார்த்துவிட்டு அவன் கேலி செய்கிறானா என்று பார்த்தாள்.
“ நீங்க காமெடி பண்றீங்க தானே ? இல்ல நான் முதல்ல தொடங்கி இருக்கேன்னு என்ன நிராகரிக்குறீங்களா ? “ என்று மைரா அதிர்ச்சியோடு கேட்டதும், கேஷவ் அவளை கட்டிலில் உட்கார வைத்து அவள் முன் மண்டியிட்டு அவள் கைகளைப் பற்றிக் கொண்டான்.
“ உன்ன நிராகரிக்குறது என் கனவுல கூட என்னால செய்ய முடியாத ஒன்னு அம்மு. நீ முழுசா தயாரா இருக்கும் போது இது நடக்கனும்னு நான் விரும்புறேன், நான் கேட்டதனாலையோ இல்ல என்னோட ஆசைகள உன்கிட்ட வெளிப்படுத்துனதுனால நடக்க வேணாம். எவ்ளோ நாள் வேணும்னாலும் வெயிட் பண்ற அளவுக்கு எனக்கு சுயக்கட்டுப்பாடு இருக்கு “ என்றான் கேஷவ்.
“ நீங்க கேட்டதால மட்டும் இத தீர்மானிக்குற அளவுக்கு நான் பக்குவம் இல்லாதவ இல்ல கேஷவ். இத முழு மனசோட முடிவு செய்ற அளவுக்கு எனக்கு பக்குவம் இருக்கு. குறைந்த பட்சம் நான் போட்டு இருக்க டிரஸ் பார்க்கும் போது, நான் நம்ம ஹனிமூனுக்கு தயாரா வந்துருக்கேன்னு நீங்க யூகிச்சு இருக்கணும். உங்களுக்கு நான் எந்த அளவுக்கு தேவைப்படுறேனோ அதே அளவுக்கு எனக்கும் நீங்க வேணும் “ என்று மைரா அவனுக்கு விளக்கம் கொடுத்தாள்.
அவள் சொன்னதை கேட்ட கேஷவ், “ இன்னிக்கு இங்க ஆரம்பிச்சா திரும்பி போக முடியாது, எதையும் மாத்த முடியாது. நீ இன்னும் என்ன பத்தி முழுஸா தெரிஞ்சிக்கல. என்னோட 20 வருஷ வாழ்க்கைய பத்தி நான் இன்னும் உனக்கு சொல்லல “ என்றான் கேஷவ்.
“ உங்க கடந்த காலம் பத்தி எனக்கு எந்த கவலையும் இல்ல கேஷவ். நீங்க என் நிகழ்காலம், நான் என் எதிர்காலத்த உங்க கூட பார்க்குறேன். இருந்தாலும் இப்போ இது நடக்க வேண்டாம்னு நீங்க நினைச்சா என்ன மன்னிச்சுடுங்க. எனக்கு கொஞ்சம் நேரம் கொடுங்க இதையெல்லாம் நான் சுத்தம் பண்றேன் “ என்று சொல்லி அவள் எழுந்து அவனை கடந்து செல்ல முயன்றாள், ஆனால் கேஷவ் அவளை அவள் மணிக்கட்டைப் பிடித்து பின்னால் இருந்து கட்டிப்பிடித்து அவள் காது மடலில் ஒரு முத்தம் வைத்து, “ நீ போட்டு இருக்க இந்த ஊதா நிறம் நம்ம வாழ்க்கையில ஒரு புது சகாப்தத்தோட தொடக்கத்த குறிக்கும் மைரா “ என்று கூறினான்.
மைரா அவனை நோக்கித் திரும்ப, அவன் அவள் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்தான். அவனது உள்ளங்கைகள் அவளது கன்னங்களிலிருந்து அவள் தோள்பட்டை வரை நகர்ந்து மெதுவாக வருடியபடி அவளது கைக்கு சென்றன.
அவள் கண்களை பார்த்து, “ சம்மதமா ? “ என்று கேஷவ் கேட்டதும், மைரா தலையசைத்து விழுங்கினாள். அவள் அணிந்திருந்த நைட்டியின் முடிச்சை அவன் இழுத்ததும், அது அவள் உடலில் இருந்து நழுவியது. மைரா ஒரு சாட்டின் உள்ளாடையில், வெட்கத்துடன் அவனிடமிருந்து முகத்தைத் திருப்பிக் கொண்டு நின்றாள். கேஷவ் அவள் தலைமுடியை முன்புறமாக நகர்த்தி அவள் கழுத்து எலும்பில் ஒரு முத்தம் வைத்தான்.
“ நீ ஒரு அழகு தேவத மைரா, நான் வணங்கி ஆராதிக்க பிறந்தவ “ என்று சொல்லி கேஷவ் அவள் காதுக்கு பின்னால் ஒரு முத்தம் கொடுத்து அவள் கன்னத்தில் முத்தமிட ஆரம்பித்தான், அவளை தன் பக்கம் திருப்பி அவள் நாடியில் முத்தமிட்டதும், மைரா அவன் பெயர் சொல்லி முனகினாள். அவன் அணிந்திருந்த சட்டையைத் தூக்கி எறிந்து அவளை கட்டிலுக்கு அழைத்துச் சென்றான். அவன் கண்கள் அவள் அழகை முழுவதுமாக பருகியது. கேஷவ் அவள் நெற்றியில் ஒரு முத்தம் கொடுத்ததும் அவளது உடலை ஓரளவு தளர்த்தியது.
“ என் பொறுமை, என் ஆசை, என்னோட எல்லா அதீதத்தையும் சோதிக்க கடவுள் படைச்ச ஒரே பொண்ணு நீ தான் மைரா “ என்று சொல்லி கேஷவ் அவள் கண்களில் முத்தமிட்டான். தான் சொன்னதை எல்லாம் திரும்பத் திரும்ப கற்பனை செய்வது போல அவள் மூக்கையும் கன்னங்களையும் மென்மையாகக் கடித்தான். கட்டை விரலாலும் ஆள்காட்டி விரலாலும் அவள் உதடுகளை சுழித்தான்.
“ போதை பழக்கத்துல இருந்து மீண்டு வர்றது ரொம்ப கஷ்டம்னு மக்கள் எல்லாரும் சொல்லும் போது எனக்கு அது வேடிக்கையா இருந்துச்சு, அத கேட்டு நான் சிரிச்சு இருக்கேன் ஆனா உன்னோட இந்த உதடுகள சுவைச்ச அப்புறம் தான் அது எவ்ளோ உண்மைனு புரிஞ்சிது அம்மு. நான் ஒருநாளும் கடந்து வர விரும்பாத என்னோட மிகப்பெரிய போதை, இந்த உதடுகள கிஸ் பண்ண, என் வாழ்நாள் முழுக்க உன் காலடியில அடிமையா இருக்க தயாரா இருக்கேன் “ என்று கேஷவ் தனது ஹஸ்கி குரலில் கூறினான்.
மைரா அவனது வார்த்தைகளின் தீவிரத்தையும், ஆழத்தையும் புரிந்து கொண்டு, அந்த நேரத்தில் அவள் அவனுக்காக என்ன உணர்கிறாள் என்பதை முழுமையாக உணர்ந்தாள், அவளுடைய எல்லா பயங்களையும் விட்டொழித்து, தனது உணர்வுகளுக்கு பெயரிட வைத்தாள்.
“ நான் ஏன் உங்க கிட்ட என்ன ஒப்படைக்க விரும்பினேன்னு இப்போ எனக்கு புரியுது கேஷவ். இந்த உணர்வுக்கு பெயர் சொல்லாம பயந்து ஓடினேன், ஆனா இனி இல்ல. இது காதல் இல்லனா இந்த உலகத்துல வேற எந்த உணர்வும் காதலா இருக்க முடியாது கேஷவ். ஐ லவ் யூ கேஷவ் “ என்று மனதில் நினைத்து பூரித்தவள், தன் கைகளை அவன் கழுத்தைச் சுற்றி வளைத்து அவன் உதடுகளில் முத்தமிடத் தொடங்கினாள்.
“ நாம எல்லாத்துலையும் சமம். நான் உங்களுக்கு சொந்தம், நீங்க எனக்கு சொந்தம் கேஷவ், நீங்க என்னுடையவரு “ என்று மைரா சொன்னதும், கேஷவ் தன் உதடுகளை அவள் உதடுகளில் பதித்தான்.
அவனது ஒரு கை அவள் இடுப்பை தொட்டு மிகவும் காம உணர்வுடன் வருடியதும், மைரா முத்தத்தில் முனகினாள், அவன் முத்தத்தை உடைத்தபோது அது மீண்டும் கழுத்தில் இருந்து தொடங்க மட்டுமே இருந்தது. அவன் அவள் கழுத்தையும் மார்பையும் தடவிய போது மைரா நெளிந்தாள். அவன் அவளை இறுக்கி அணைத்து அவள் கழுத்தில் தன் உள்ளங்கைகளை வைத்து மெல்ல கீழே நகர்ந்தான், அவனது ஸ்பரிசத்தை எதிர்பார்த்த மைராவின் மார்பு விம்மி மைராவால் அவன் பெயரை முனகுவதை நிறுத்த முடியவில்லை. அவளது மேலாடையை அவன் ஒரே மடக்கில் கிழித்தபோது அவள் அவனை இழுத்து அவன் கண்களில் இருந்து தன்னை மறைத்தாள்.
கேஷவ் அவள் கழுத்து எலும்பில் முத்தமிட்டு அவள் மென்மைகளை அடையும் வரை முத்தமிட்டான். தலையை நிமிர்த்தி அவளது பொக்கிஷங்களைக் கண்ட திருப்தியில் முனகினான்.
“ நீ அழகா இருக்க மைரா. நீ குண்டா இருக்குறது எனக்கு பிடிக்குமானு நீ ஒரு முறை என்கிட்ட கேட்டது ஞாபகம் இருக்கா ? இப்படி கொழுகொழுன்னு இருக்குறது எவ்ளோ அழகு தெரியுமா ? உன்னோட இந்த வளைவுகள் எனக்கு தூக்கமில்லாத இரவுகள கொடுத்து இருக்கு மைரா, எத்தனை நைட்டு நான் பச்ச தண்ணியில குளிச்சு இருக்கேன் தெரியுமா ? நாம கட்டிப்பிடிக்கும் போது நான் முழுசா உன்னோட அரவணைப்புல நிம்மதியா உணருவேன் ஏன்னா நீ இப்படி கொழுகொழுன்னு இருக்குறதால தான். நான் உன்ன தொடும் போது நீ எவ்ளோ மென்மையா இருப்ப தெரியுமா? இது தான் உண்மையான சந்தோஷம், இப்போ சொல்லு நீ இப்படி இருக்குறதுல சந்தோஷமா ? “ என்று கேட்டான் கேஷவ்.
“ நான் உங்களுக்காக இப்படி கொழுகொழுன்னு இரக்க விரும்புறேன்.” என்று மைரா பதில் சொன்னதும், கேஷவ் சிரித்துக் கொண்டே அவளது மார்பெலும்பில் முத்தமிட்டு தன் முகத்தை அவளது பிளவில் புதைத்தான். அவன் வார்த்தைகளில் சொன்னது போலவே அவள் உடம்பெல்லாம் முத்த மழை பொழிந்தான்.
அவன் அவளை புரட்டிப் போட்டு முதுகு முழுவதும் முத்தங்களைப் பொழியத் தொடங்கி அவன் சொல்லாததையும் செய்து அவளை இன்பத்தில் மூழ்கடித்தான்.
மைரா மூச்சிரைக்க மீண்டும் அவளை புரட்டி கட்டிலின் அடிப்பகுதியில் நின்று அவள் கணுக்காலைப் பிடித்து இழுத்து அவள் கால் விரல்களில் முத்தமிட ஆரம்பித்தான்.
“ நீ யாருக்கு சொந்தம் மைரா ? “ என்ற கேஷவ் கேட்க, “ உங்களுக்கு சொந்தமானவ மாமா “ என்று பதில் சொன்னாள் மைரா.
கேஷவ் திருப்தியான புன்னகையை உதிர்த்து அவள் கால்களில் முத்தமிட தொடர்ந்தான். அவளது மீதி ஆடைக்கு சுதந்திரம் கொடுக்க அவள் கண்களை பார்த்து அனுமதி கேட்டு தன் புருவத்தை உயர்த்தினான். மைரா மெல்ல தலையை ஆட்டி சொன்னாள், அதே சமயம் அருகில் இருந்த விளக்கின் வெளிச்சத்தைப் பார்த்து கூச்சத்தோடு வெட்கப்பட்டாள்.
“ நான் உன்ன முழுசா பார்க்க விரும்புறேன் அம்மு, நாம எதையும் இருட்டுல செய்ய மாட்டோம். எதுவும் உன்ன என்கிட்ட இருந்து மறைக்காது “ என்று கேஷவ் உறுதியாக சொல்ல, மைரா சரி என்று தலையசைத்தாள்.
கேஷவ் அவளது ஆடைகளுக்கு முழு சுதந்திரம் கொடுத்ததும் மைரா கண்களை மூடிக்கொண்டாள்.
“ நீ எவ்ளோ அழகா இருக்கனு கண்ண திறந்து என்னோட கண்ணுல பாரு மைரா. நீ எனக்கு சொந்தமா இருக்க நான் ரொம்ப அதிர்ஷ்டசாலி அம்மு “ என்று சொன்னதும் மைரா கண்களை திறந்தாள்.
கேஷவ் தன் ஆடைகளைக் களைந்த போது மைரா தன் உள்ளங்கைகளால் கண்களை மூடிக்கொண்டாள், அவன் அவள் உள்ளங்கைகளை அகற்றி அவள் கண்களில் முத்தமிட்டான்.
“ கண்ண திற அம்மு, நீ என்ன எந்த அளவுக்கு பாதிக்குறனு புரியுதா ? எத்தன நைட்டு, பகல் என்னோட ஆசைய உன்கிட்ட இருந்து மறைச்சு இருக்கேன் தெரியுமா ? “ என்று கேஷவ் சொன்னதும், அவனை முழுமையாய் பார்த்த மைரா, “ கேஷவ், எனக்கு பயமா இருக்கு கொஞ்சம், பதற்றமா இருக்கு “ என்று திக்கி திணறினாள்.
அவள் வார்த்தைகளுக்கு கேஷவ் சிரித்தபடி உதட்டைக் கடித்துக் கொண்டான்.
“ உன்ன மென்மையான முறையில நான் பார்த்துக்குறேன் அம்மு, நீ அமைதியா, நிதானமா இரு. நான் உன்ன பார்த்துக்குறேன் “ என்று கேஷவ் அவளை சாந்த்தப்படுத்தினான்.
மைரா தலையை அசைக்க, கேஷவ் அவளது மென்மைகளை சுவைத்தான். மைரா அவனது ஸ்பரிசத்தில் தன்னை இழந்து கால் விரல்களை வளைத்தாள்.
“ கேஷவ்வ்வ்வ் “ என்று அவள் சத்தமாக முனகியதும், கேஷவ் வெற்றிப் புன்னகையை உதிர்த்தபடி அவளை முழுமையாய் ஆராதிக்க தொடங்கினான். அவள் தன் பெயரை திரும்பத் திரும்ப முனகிக் கொண்டு போர்வையைப் பிடித்துக் கொண்டு நெளிவதைக் கண்டான்.
ஈருடல் ஓர் உடலாக, அவளது வலியின் அலறல், அவனது இனிமையான வார்த்தைகளால் அமைதியானது. அவள் கண்களின் ஓரத்திலிருந்து கண்ணீர் உருண்டோடுவதைக் கண்டவன், அவற்றை தன் உதடுகளால் துடைத்து அவள் கண் இமைகளை முத்தமிட்டான்.
இருவரும் இந்த உலகத்தை மறந்து இன்ப கடலில் மூழ்கி போனார்கள்.
மைரா அவன் பெயரை உரக்க முனகி கொண்டிருந்தாள். கேஷவ் அவளது அழகையும், முனகல்களையும் ரசித்தான்.
இருவரும் உச்சத்தை அடைந்த போது மைரா அவனது பெயரை கத்தினாள். கேஷவ் அவளது வியர்வை படிந்த முகத்தைப் பார்த்தான், இருவரும் காற்றுக்காக மூச்சிரைத்துக் கொண்டிருந்தனர்.
அவர்களின் உடல் ஆசுவாசப்பட்டதும் கேஷவ் குனிந்து அவள் நெற்றியிலும் உதடுகளிலும் முத்தமிட்டான்.
“ உனக்கு ஓகேவா, நல்லா இருக்கியா அம்மு ? “ என்று கேஷவ் கேட்டதும், “ நல்லா இருக்கேன் மாமா “ என்றாள் மைரா.
கேஷவ் அவள் மீது சரிந்து அவள் மார்பில் முகம் புதைத்தான்.
“ நாம எவ்ளோ நெருக்கமா ஒன்னா இருக்கோம்னு உன்னால உணர முடியுதா அம்மு ? “ என்று கேஷவ் கேட்டதும், மைரா வெட்கத்துடன் ஆம் என்று தலையை ஆட்டினாள்.
அவன் அவளருகே படுத்த போது அவர்களின் முதல் இரவின் சாட்சியாக போர்வை ரத்தத் திட்டுகளால் அழுக்கடைந்திருந்தது.
“ படுக்கையில இரு அம்மு, நான் கொஞ்ச நேரத்துல திரும்பி வரேன் “ என்று சொல்லிவிட்டு அவன் படுக்கையில் இருந்து இறங்கினான்.
அவன் ஆடையின்றி நிற்பதை பார்த்து மைரா வெட்கப்பட்டாள். கேஷவ் அவளைப் பார்த்து கண்ணடித்தபடி முழு மகிமையுடன் பாத்ரூமுக்குள் நுழைந்தான். தன்னை சுத்தப்படுத்தி, இடுப்பில் ஒரு துண்டை கட்டிக் கொண்டு, வெந்நீரில் நனைத்த துண்டையும் எடுத்துக்கொண்டு திரும்பி வந்தான். மைரா தன் உடலை போர்வையால் மூடியிருந்தாள்.
அவன் போர்வையை அகற்ற முயன்றான் ஆனால் மைரா அவனை தடுத்தாள்.
“ மைரா, உன்னோட டிரஸ் எல்லாத்தையும் அவிழ்த்தது நான் தான் அப்போ திரும்ப உன்ன டிரஸ் பண்றதும் நானா தான் இருக்கணும். நான் ஏற்கனவே சொன்ன மாதிரி, நாம ஆரம்பிச்சுட்டா எதையும் மாத்த முடியாது, இதுல இருந்து திரும்ப போகவும் முடியாது. நீ எல்லாத்துலையும் வெளிப்படையா இருக்கனும், நீ உணர்ற எல்லாத்தையும் என்கிட்ட பகிர்ந்துக்கனும்னு நான் விரும்புறேன். சரியா ? “ என்று கேஷவ் அவளிடம் கேட்டான்.
மைரா சரி என்று முனகியதும், அவள் உடலில் இருந்த போர்வையை அகற்றினான். அவளை சுத்தம் செய்துவிட்டு தன் இரு கைகளால் சோபாவுக்கு தூக்கிச் சென்று படுக்க வைத்து போர்வையால் மூடினான். அவன் படுக்கைக்குத் திரும்பி போர்வையை அகற்றி, அலமாரியிலிருந்து புதிய போர்வையை விரித்த பிறகு அவளை மீண்டும் படுக்கைக்கு தூக்கி சென்று, அவளது வலிக்கு இதமளிக்க அவள் தொடைகளுக்கு இடையில் வெதுவெதுப்பான துண்டை வைத்தான். மைரா வலியில் முனகியதும் கேஷவ் அவள் தலைமுடியை முத்தமிட்டான்.
“ இந்த துண்டு உன் வலிய கொஞ்சம் தணிக்கும், காலையில வலி இருந்தா நான் உனக்கு மருந்து வாங்கிட்டு வரேன். நீ கஷ்டப்பட்டு கண் முழிச்சு இருக்க அளவுக்கு களைப்பா இருக்க அதனால இப்போ தூங்கலாம் “ என்று சொல்லி கேஷவ் அவளை அணைத்துக் கொண்டு அவள் தூங்கும் வரை அவள் தலைமுடியை வருடினான். அவளது குறட்டை சத்தம் கேட்டு அவன் முகம் மலர்ந்தது.
“ உன்னோட கண்ணுல நான் பார்க்க விரும்புனத பார்த்தேன் அம்மு. உனக்கு என் மேல இருக்க உணர்வு கொஞ்சம் கொஞ்சமா மாறுறத பார்த்து இன்னைக்கு அந்த உணர்வ முழுசா உன் கண்ணுல பார்த்தேன். நாம வீட்டுக்கு திரும்பி போனதும் உன்கிட்ட எல்லாத்தையும் சொல்லுவேன் அம்மு. நான் உனக்காக கட்டி இருக்க ஸ்பெஷல் இடத்துக்கு உன்ன கூட்டிட்டு போய் எல்லாத்தையும் சொல்ல விரும்புறேன். அந்த நாள் நம்ம வாழ்க்கையில மறக்க முடியாத நாளா இருக்கனும்னு நான் விரும்புறேன் அதனால உனக்கு ஸ்பெஷல் சர்ப்ரைஸ் கொடுப்பேன், அதுவும் கூடிய சீக்கிரம் அம்மு “ என்று மனதில் நினைத்துக் கொண்டு, மைராவை அணைத்தபடி மிக நிம்மதியான உறக்கத்தில் ஆழ்ந்தான்.
*********************
முன்னோட்டம்:
“ நீ அப்பாவி இல்லனு நான் நெனச்சேன் அம்மு. நீ மாத்திரை சாப்பிடலனா என்ன ஆகும் தெரியாதா ? சீக்கிரமே லயா நம்ம கூட இருக்க வாய்ப்பு இருக்கும் “

2 comments
[…] ஐ லவ் யூ கேஷவ் […]
[…] 53.ஐ லவ் யூ கேஷவ் […]