Home Family86. அவன கொஞ்சம் ரெஸ்ட் எடுக்க விடு

86. அவன கொஞ்சம் ரெஸ்ட் எடுக்க விடு

by Siragugal Novels
10 views

மறுநாள் காலையில் மைரா அன்றைய தினத்திற்கு தயாராகி கேஷவ் தயாராகி கொண்டிருப்பதை பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் அவன் முன் நின்று அவன் சட்டை பட்டனை மாட்ட ஆரம்பித்தாள். கேஷவ் அவள் காதுக்குப் பின்னால் ஒரு முடி இழையை அவள் காது மடலில் முத்தமிட்டான். மைராவும் பதிலுக்கு புன்னகைத்து அவன் பெல்ட் அணிவதை பார்த்தாள்.

“ உங்க வேல நேரத்துல நான் உங்களுக்கு போன் அது உங்களுக்கு தொந்தரவா இருக்குமா இல்ல நீங்க எனக்கு போன் பண்ற வர நான் வெயிட் பண்ணட்டுமா ? “ என்று மைரா அவனிடம் கேட்டாள்.

“ நீ எனக்கு எப்போ வேணும்னாலும் போன் பண்ணலாம் அம்மு. ஆனா நான் முதல் ரிங்குல உனக்கு பதில் சொல்லாம போனா அப்போ நான் மீட்டிங்ல இருக்கேன்னு புரிஞ்சிக்கோ. நான் மீட்டிங் முடிஞ்சதும் உடனே போன் உனக்கு போன் பண்றேன். ஆனா கவலைப்படாத எந்தவொரு மீட்டிங் போறதுக்கும் முன்னாடியே நான் உனக்கு சொல்லிடுவேன் அதனால நான் உனக்கு பதில் சொல்லலனு நீ கவலைப்பட வேண்டியது இல்ல “ என்று சொல்லி கேஷவ் புன்னகைத்தான்.

“ நான் போன் பண்ணா ஏன் எப்பவும் முதல் ரிங்குல பதில் சொல்றீங்க ? “ என்று மைரா கேட்க, “ ஏன்னா உனக்கு தான் எப்பவும் என்னோட முன்னுரிமை அம்மு. எல்லாம் உனக்கு அப்புறம் தான் “ என்று சொல்லி கேஷவ் அவள் முகத்தை உள்ளங்கையில் பற்றி நெற்றியை முத்தமிட்டான்.

“ எனக்காக நீ உன்ன நல்லா பார்த்துக்கணும், செய்வனு எனக்கு சத்தியம் பண்ணு. நேரத்துக்கு சாப்பிடனும், நல்லா தூங்கனும். நல்ல பொண்ணா இருக்கணும். நான் ஞாயிற்றுக்கிழமை வரும் போது நீ என்ன கேட்டாலும் தருவேன். சரியா ? “ என்று கேஷவ் சொன்னதும் , மைரா அவனது உடலை அணைத்து தன் கன்னத்தை அவன் மார்பில் வைத்தாள். தன் வேதனையை மறைத்து அவனை வழியனுப்ப அவள் தன் உணர்வுகளை மறைத்து கொண்டிருக்கிறாள் என்று கேஷவுக்குத் தெரியும். அவளைத் தனியே விட்டுவிட்டு செல்வதால் தன் உள்மனக் கொந்தளிப்பை அவளுக்கு தெரியாமல் கேஷவ் மறைத்தான்.

“ உன்ன என் கூட கூட்டிட்டு போக விரும்புறேன் ஆனா என்னால முடியாது அம்மு “ என்று மனதில் நினைத்துக் கொண்டான்.

மைரா அவன் முகத்தை இறுக்கி பிடித்து முத்தமிட கேஷவும் அவளை பதிலுக்கு முத்தமிட்டான். ஒரு கணநேர அமைதி அவர்கள் மீது படர்ந்தது. மைரா முத்தத்திலிருந்து பின்வாங்கி அவனைப் பார்த்து புன்னகைத்தாள். மொபைல் சார்ஜரை வைக்க சிறிய லக்கேஜைத் திறந்த மைரா அதில் தனது சேலையையும் சால்வையையும் பார்த்து திகைத்து நின்றாள். ஒரு துளி கண்ணீர் மைராவின் கன்னங்களில் வழிந்தோடியது, ஆனால் உடனே அவள்  உள்ளங்கைகள் அந்த கண்ணீரை துடைத்தது.

மைரா கதவைத் திறக்க தாழ்ப்பாளைப் பிடித்தாள், ஆனால் கேஷவ் நிறுத்தி அவளை இழுத்து அணைத்துக் கொண்டு அவள் உதடுகளை வேகமாக முத்தமிட்டான். முத்தமிடுவதை நிறுத்தியதும் கண்களை மூடிக்கொண்டு இருவரின் நெற்றியை ஒன்றாக சேர்த்து, “ ஐ லவ் யூ மைரா “ என்று கிசுகிசுத்தான்.

“ ஐ லவ் யூ கேஷவ் “ என்று மைரா புன்னகையோடு சொல்ல, இருவரும் கைகோர்த்து ஹாலை அடைந்தனர். கேஷ்வ் குடும்பத்திடம் விடைபெற்ற பிறகு மைரா அவனை விமான நிலையத்திற்கு அழைத்துச் சென்றாள். அவள் சிரிப்பதைப் பார்த்துக் கொண்டிருந்த கேஷவுக்கு அவள் எவ்வளவோ முயன்று அதை செய்கிறாள் என்ற அவளது இக்கட்டான நிலை புரிந்தது.

“ நான் உனக்காக ஒரு செக்யூரிட்டிய ஏற்பாடு பண்ணி இருக்கேன். நீ வீட்ட விட்டு வெளிய வந்த உடனே அவர் எல்லா இடதுக்கும் உன்ன பின்தொடர்வாரு. நான் ஒரு ஏஜென்சி மூலம் அகாடமிக்கு ஒரு செக்யூரிட்டிய நியமனம் பண்ணி இருக்கேன். நாளைக்குள்ள கேமரா பொருத்தி கண்காணிக்க ஆரம்பிச்சுடுவாங்க “ என்று கேஷவ் அவளிடம் கூறினான்.

“ இன்னைக்கு ஞாயிற்றுக்கிழமை, நான் சனிக்கிழம இரவுக்காக வெயிட் பண்ணுவேன் அதனால நீங்க சரியான நேரத்துக்கு வந்தா நல்லது, வேற எத பத்தியும் கவலைப்பட வேண்டாம். நீங்க சொன்ன மாதிரியே நான் எல்லாம் செய்வேன் “ என்று கூறி மைரா காரை நிறுத்திவிட்டு அவனை நோக்கித் திரும்பினாள்.

கேஷவ் அவள் பக்கம் சாய்ந்து அவள் உதடுகளையும் கண்களையும் மெல்ல முத்தமிட்டான்.

“ அந்தக் கதவுகள தாண்டி நான் போனதும் நீ அழாம இருக்குறது நல்லது. நான் டெல்லி போன உடனே உனக்கு போன் பண்ணுவேன். உன் கண்ணு சிவந்து, வீக்கம் இல்லாம இருக்கணும், இல்லனா சனிக்கிழமை நைட்டு உன்ன தண்டிப்பேன் “ என்று கேஷவ் சொன்னதும், மைரா மீண்டும் அவனை அணைத்துக் கொள்ள, கேஷவ் அவள் முதுகைத் தட்டி கொடுத்தான்.

அவர்கள் காரில் இருந்து இறங்க, கேஷவ் லவ் யூ என்று முணுமுணுத்தான். கேஷவுக்காகக் காத்திருந்த வருண் அவர்களிடம் சென்று மைராவுக்கு வணக்கம் பரிமாறிக் கொண்டான். மைரா அவர்களிடம் விடைபெற்றுக் கொண்டு கேஷவனின் உருவம் அவள் கண்களில் இருந்து மறையும் வரை பார்த்துக் கொண்டிருந்தாள். காருக்கு திரும்பி கண்ணீரை நிறுத்த கண்களை மூடி ஸ்டீயரிங்கில் சாய்ந்தாள். அவளது மொபைலில் இருந்து நோட்டிபிகேஷன் சத்தம் கேட்டு அது கேஷவிடம் இருந்து வந்தது என்று தெரிந்ததும் உடனடியாக அதை திறந்தாள்.

ஐ லவ் யூ என்ற மெசேஜ் அதோடு ஒரு இதயம் மற்றும் ஸ்மைலி ஈமோஜியுடன் பார்த்து அவள் புன்னகைத்தாள். அவள் அவனுக்கு பதிலளித்துவிட்டு வீட்டை நோக்கி காரை ஓட்ட ஆரம்பித்தாள்.

வீட்டிற்குள் நுழைந்ததும், எல்லோரும் ஹாலில் படம் பார்க்க  மெத்தை போட்டிருப்பதைக் கண்டாள், நைனா மைராவை இழுத்து அருகில் உட்கார வைத்தாள். வசுந்த்ரா அனைவருக்கும் ஐஸ்கிரீம் கொடுத்தார், ஆனால் மைரா அதை மறுத்துவிட்டாள்.

அவர்கள் படம் பார்த்துக் கொண்டிருந்தனர், ஆனால் மைரா தனது மொபைலைப் பார்த்துக் கொண்டே கேஷவின் அழைப்புக்காக காத்திருந்தாள். முதல் படம் முடிந்ததும், அடுத்த படத்தைத் தொடங்குவதற்கு முன்பு நைனா சிற்றுண்டி தயாரிக்க கிளம்பினாள். கேஷவின் அழைப்பைப் பார்த்து புன்னகைத்த மைரா, முதல் ரிங்கில் பதிலளித்து வீட்டை விட்டு வெளியேறினாள்.

“ ஐ மிஸ் யூ கெட்சப் “ என்று அவள் உடனே சொல்ல, “ உன்ன ரொம்ப மிஸ் பண்றேன் அம்மு “ என்று கேஷவும் கூறினான்.

வருணுடன் காரில் ஏறிய கேஷவ், மைரா சொல்வதைக் கேட்டபடி டிரைவரை ஸ்டார்ட் செய்யுமாறு சைகை காட்டினான்.

“ எல்லாரும் இன்னைக்கு படம் பார்க்க பிளான் பண்ணி இருக்காங்க. அம்மா எல்லாருக்கும் ஐஸ்கிரீம் கொடுத்தாங்க ஆனா நான் அத வேணாம்னு சொல்லிட்டேன். இப்போ ரெண்டாவது படம் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி நைனா ஸ்நாக்ஸ் ரெடி பண்ணிட்டு இருக்கா. நீங்க இருந்திருந்தா உங்க மேல சௌகரியமா சாய்ஞ்சு படம் பார்த்திருப்பேன். என் முதுகு இப்போ வலிக்குது கெட்சப் “ என்று மைரா தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்தாள்.

“ நைனா எங்க ? நீ அவ மேல சாய்ஞ்சுக்க வேண்டியது தானே இல்ல படுத்துட்டு படம் பார்க்க வேண்டியது தானே ? “ என்று கேஷவ் கேட்டதும், “ இல்ல, அது எதுவும் வசதியா இல்ல. நீங்க தான் எனக்கு வசதியா இருப்பீங்க. சனிக்கிழம நைட்டு நீங்க வந்ததும் நாம படம் பார்ப்போம்னு எனக்கு சத்தியம் செய்யுங்க. நான் சௌகரியமா உங்க மடியில உட்கார்ந்து படம் பார்ப்பேன் “ என்று மைரா கேட்டாள்.

“ பிளான் நல்லா இருக்கு, என்ன படம் பார்க்கலாம்னு யோசிச்சு வை, நாம ஒன்னா பார்ப்போம். இப்போ ஒரு ஸ்கூப் ஐஸ்கிரீம் சாப்பிட்டு படம் பாரு “ என்று கேஷவ் சொன்னதை கேட்டு, “ சரி, நீங்க போன் பண்ணுவீங்கனு நான் வெயிட் பண்றேன் “ என்று மைரா பதில் கூறி மைரா அழைப்பை துண்டித்தாள், அவளது வார்த்தைகளில் பொதிந்திருந்த வலியை உணர்ந்த கேஷவ் கண்களை மூடினான். தனக்கு அருகில் மைரா இல்லாமல் தானும் வேதனையாக உணர்ந்த போது, அவளை அந்த சூழ்நிலையிலிருந்து விடுவிக்க முடியவில்லையே என்ற பரிதாபத்தை அவன் உணர்ந்தான்.

மைரா தன் அறைக்குள் நுழைந்து அவன் கிளம்புவதற்கு முன் கேஷவ் போட்ட டவலை எடுத்தாள். நைனாவின் குரலைக் கேட்டதும் அவள் அனைவருடனும் படம் பார்க்க சென்றாள்.

கேஷவின் கார் அவனது வீட்டின் முன் நிறுத்தப்பட்டது, காவலர் கதவைத் திறக்க விரைந்தார். போலீசாரின் சல்யூட்டுக்கு கேஷவ் தலையசைத்தான். உள்ளே நுழைந்த அவனை வேலைக்காரர் வரவேற்று உடனே தண்ணீர் கொடுத்தார்.

“ வருண், கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு வேலைய தொடங்கு. நாளைக்கு மீட்டிங் இருக்குனு சொல்லி நம்ம டீம்ல இருக்க எல்லாரையும் வர சொல்லி அதிகாரப்பூர்வ மெயில் அனுப்பு. நம்ம வேலை முடியுற வரை எந்த சாக்குபோக்கும் சொல்ல கூடாது நான் நாளைக்கு ஆபீஸ் வர்றதுக்கு முன்னாடி இந்த கேஸ் சம்மந்தமான பைல் (file) என் டேபிளுக்கு வரணும் “ என்று கேஷவ் சொன்னதும் வருண் சரி என்று முணுமுணுத்துக் கொண்டே தன் வீட்டிற்கு விடைபெற்றுச் சென்றான்.

கேஷவ் முதல் மாடியில் உள்ள அவனது அறைக்குள் நுழைந்து தனது சட்டையை கழற்றிவிட்டு அலமாரி இருந்த அறைக்கு சென்றான். தன்னுடைய பாக்கெட்டிலிருந்து சாவியை எடுத்து அலமாரியைத் திறந்து அவனுடைய பிளேஸர்களுக்கு நடுவில் இருந்த மைராவின் உருவப்படம் அவனை வரவேற்றது.

கேஷவ் அவள் முகத்தை தொட்டு அவள் கன்னத்தில் முத்தமிட்டு புத்துணர்ச்சி பெற பாத்ரூமுக்குள் நுழைந்தான். நாள் முழுவதும் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு முறை மைராவை அழைப்பதை உறுதி செய்தான்.

இரவில் மைரா தனது இரவு உணவை முடித்துவிட்டு, நைனாவுக்கு பாத்திரங்களை எடுத்து வைக்க உதவி செய்துவிட்டு பின்னர் தனது அறைக்குத் திரும்பினாள். அவள் தனது இரவு ஆடைகளை மாற்றிக்கொண்டு படுக்கையில் படுக்க எத்தனித்தாள் ஆனால் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டதும் நின்றாள். கதவைத் திறந்தவள் அர்ச்சனாவும் வசுந்தராவும் அவளைப் பார்த்து புன்னகைப்பதைப் பார்த்தாள்.

“ நீங்க ரெண்டு பேரும் இங்க என்ன பண்றீங்க? “ என்று மைரா கேட்டதும், “ நீ தனியா இருக்க அதனால உன்ன பார்த்துட்டு போகலாம்னு வந்தோம் “ என்று அர்ச்சனா கூறினார்.

“ நீ வீட்டுக்கு வந்து என் கூடவும், அப்பா கூடவும் தங்க முடிவு பண்ணா, நாம ஒன்னா தூங்கலாம் “ என்று வசுந்தரா கூறினார்.

“ அப்படி இல்லனா எங்க ரெண்டு பேருல ஒருத்தர் உன் கூட இங்க ரூம்ல தங்குறோம் “ என்று அர்ச்சனா யோசனை சொன்னார்.

“ எனக்கு இப்போ தூங்கி பழகிடுச்சு அதனால நான் இங்க தான் இருப்பேன். உங்க ரெண்டு பேருல ஒருத்தர் இங்க தூங்க விரும்பினா அதுல எனக்கு ஒரு பிரச்சனையும் இல்ல, ஆனா நான் தனியா தூங்குறதுலயும் எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல. கல்யாணத்துக்கு முன்னாடியே நான் ரூம்ல தனியா தான் தூங்கிட்டு இருந்தேன் “ என்று மைரா அவர்களிடம் சொன்னாள்.

“ கேஷவ் வேலைக்குப் போயிருக்கறதால இப்ப நீ தனியா இருக்கக் கூடாதுன்னு நினைச்சோம். வசு இன்னைக்கு உன் கூட  படுக்கட்டும், நாளைக்கு நான் வரேன் “ என்று சொல்லி அர்ச்சனா விடைபெற, வசுந்தரா அறைக்குள் நுழைந்ததும் மைரா கதவை மூடினாள்.

“ மைரா வந்து உட்காரு நான் உன் தலைய மசாஜ் செய்றேன். உனக்கு கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கும் அப்புறம் நல்லா தூக்கமும் வரும் “ என்று வசுந்தரா சொன்னதும், மைரா தரையில் உட்கார்ந்தாள். வசுந்தரா படுக்கையில் அமர்ந்து மைராவின் தலையை மசாஜ் செய்ய ஆரம்பித்தார்.

“ உங்க கையில மந்திரம் இருக்கு மா “ என்று மைரா சொன்னதை கேட்டு, “ கேஷவ் உன் தலைய மசாஜ் செய்யும் போது நீ அவன்  கிட்டயும் இதையே தான் சொல்லுவ “ என்று வசுந்தரா கிண்டல் செய்தார்.

“ நிச்சயமா உங்க ரெண்டு பேரோட கையிலையும் மேஜிக் இருக்கு மா. நான் ரொம்ப அதிர்ஷ்டசாலி “ என்று மைரா சொல்லும் போதே அவள் மொபைல் ஒலிக்கத் தொடங்கியது.

வசுந்தரா மசாஜ் செய்வதை நிறுத்திவிட்டு மைராவை அழைப்புக்கு பதிலளிக்க அனுமதித்தார். மைரா சோபாவில் அமர்ந்து கேஷவிடம் பேசினாள்.

“ டின்னர் சாப்பிட்டு முடிச்சிட்டீங்களா கெட்சப் ? “ என்று மைரா கேட்டதும், “ இப்பத் தான் சாப்பிட்டேன் அம்மு, நீ சாப்பிட்டியா ? “ என்று கேஷவ் பதிலுக்கு அவளிடம் கேட்டான்.

“ நான் சாப்பிட்டு முடிச்சிட்டு நம்ம ரூம்ல இருக்கேன். அம்மா என் கூட தூங்க வந்துருக்காங்க. நீங்க எனக்கு போன் பண்ற வர அம்மா எனக்கு தலை மசாஜ் பண்ணிட்டு இருந்தாங்க “ என்று மைரா அவனுக்கு பதில் சொன்னாள்.

“ அப்போ நான் தொந்தரவு பண்ணிட்டேனா ? “ என்று கேஷவ்  கேட்டதும், “ இல்ல, நீங்க போன் பண்ணுவீங்கனு நான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன். நீங்க நாளைக்கு ஆபீஸ் போக தயாரா இருக்கீங்களா ? “ என்று மைரா கேட்க, “ எல்லாம் ரெடி அம்மு.  நாளைக்கு நாங்க தொடங்குறதுக்கு முன்னாடி எனக்கு அடுத்தடுத்த மீட்டிங் இருக்கு “ என்றான் கேஷவ்.

“ இங்க இருக்க நம்ம வீடு மாதிரி தான் டெல்லி வீட்டையும் கட்டி இருக்கீங்களா ? “ என்று மைரா கேட்க, “ இல்ல அம்மு, இது பலத்த பாதுகாப்போட இருக்க சாதாரண ரெண்டு மாடி வில்லா மாடல்.  இந்த ஏரியாவுல வாழுற மக்கள் பெரும்பாலானவங்க உயர் அதிகாரிங்க அதனால இங்க எப்பவும் பாதுகாப்பு இறுக்கமா இருக்கும். “ என்று கேஷவ் பதில் சொன்னான்.

“ உங்களுக்கு டின்னர் நீங்க சமைச்சீங்களா இல்ல வேலைக்காரங்க சமைச்சாங்களா ? “ என்று மைரா கேட்டதும், “ நான் வேலை இல்லாம இல்ல வேலை குறைவா இருக்கும் போது மட்டும் நானே சமைப்பேன் அதனால பெரும்பாலான நேரத்துல வேலைக்காரர்  தான் சமையல் செய்வாரு. இப்போ சொல்லு நீ என்ன டிரஸ் போட்டுருக்க ? “ என்று அவளிடம் சொன்ன கேஷவ், அவனது கேள்வியை மட்டும் ஹஸ்கி குரலில் கேட்டான்.

படுக்கையில் படுத்திருந்த வசுந்தராவைப் பார்த்த மைரா, பால்கனிக்குச் சென்று தனியுரிமைக்காக கதவைச் சாத்தினாள்.

“ என்ன ஆச்சு, என்ன சத்தம் அது ? பால்கனியில இருக்கியா ?” என்று கேஷவ் கேட்க, “ ஆமா, நாம பேசுறத அம்மா கேட்குறத நான் விரும்பல, அதனால நான் வெளிய வந்துட்டேன். அப்புறம் என்ன கேள்வி கேட்டீங்க ? நைட்டு டிரஸ் தவிர இந்த நேரத்துல வேற என்ன டிரஸ் போடுவேன் ? “ என்று மைரா அவனிடம் கேட்டாள்.

அவள் சொன்னதை கேட் புன்னகைத்த கேஷவ், “ நாளைக்கு உன் பிளான் என்ன? “ என்று கேஷவ் அவளிடம் கேட்டான்.

“ நான் அகாடமிக்கு போவேன், நைனாவும் என்கூட வருவா. நான் அவகிட்ட கொஞ்ச நாள் லீவ் எடுத்துக்க சொன்னேன் ஆனா அவ இப்போ அவளுக்கு நேரம் தேவையில்லன்னு சொல்லிட்டா. நானும் அவள வற்புறுத்தல “ என்று மைரா கூறினாள்.

“ ரொம்ப முக்கியமான விஷயம் சொல்லணும்னு நினைச்சேன். கவனமா கேளு சரியா “ என்று கேஷவ் அவசர குரலில் சொல்ல, “ ஹ்ம்ம் நான் கேட்டுட்டு தான் இருக்கேன் கெட்சப் சொல்லுங்க, அது என்ன ? “ என்று மைரா ஆர்வமுடன் கேட்டாள்.

“ ஐ லவ் யூ “ என்று கேஷவ் சொன்னதும், அவன் தன்னுடன் விளையாடுகிறான் என்பதை உணர மைராவுக்கு சில நொடிகள் பிடித்தன, ஆனால் அவனது ஐ லவ் யூ அவள் கன்னங்களை சிவப்பாக்கியது.

“ நீங்க நாளுக்கு நாள் அதிகமா குறும்பு செய்ய ஆரம்பிச்சுட்டீங்க “ என்றாள் மைரா.

இருவரும் மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருந்தனர், வசுந்த்ரா நள்ளிரவில் எழுந்த போது மைரா அறையில் இல்லை என்று நேரத்தை பார்த்தார். விடியற்காலை 2 மணி என்று பார்த்தவர்  படுக்கையிலிருந்து இறங்கி அவளைத் தேடினார். பால்கனியில் மைரா இன்னும் அழைப்பில் பேசிக் கொண்டிருப்பதை கண்டு அவர்  திகைத்துப் போனார்.

“ இந்தப் பொண்ண நான் என்ன செய்றது ? “ என்று நினைத்தபடி வசுந்தரா பால்கனியின் கதவைத் தட்டினார். மைரா திடுக்கிட்டாள், ஆனால் தனது அம்மாவை பார்த்ததும் நிம்மதியடைந்தாள்.

“ மைரா, ஏற்கனவே மணி ரெண்டு ஆயிடுச்சு. உனக்கு வேலை இல்லையா, நாளைக்கு கேஷவுக்கு முதல் நாள் இருக்கு தானே ? அவன கொஞ்சம் ரெஸ்ட் எடுக்க விடு “ என்று வசுந்தரா சொன்னதும், மைரா சிணுங்கினாள், ஆனாலும் கேஷவுக்கு குட்நைட் சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்து விட்டு வசுந்த்ராவுடன் படுக்கைக்குத் திரும்பினாள். அவள் சிணுங்கியதைக் கேட்டு சிரித்த கேஷவ், அவளது சேலையை எடுத்து தன் மார்போடு அணைத்துக் கொண்டு கட்டிலில் படுத்தான்.

காலையில் ஹாலில் இருந்த சோபாவில் வசுந்த்ரா உட்கார்ந்ததும், அர்ச்சனா அவர் அருகில் அமர்ந்து தேநீர் கோப்பையை அவரிடம் கொடுத்தார்.

“ மைரா நல்லா தூங்குனாளா ? “ என்று அர்ச்சனா கேட்க, “ அவ தனியா இருப்பா, அவளுக்கு ஒரு துணை தேவைப்படும்னு நெனச்சு நாம தப்பு பண்ணிட்டோம். காலையில ரெண்டு மணி வரை ரெண்டு பேரும் பேசிட்டு இருந்தாங்க. என்ன நம்புங்க, நான் அவள தூங்க வர சொல்லாம இருந்திருந்தா அவங்க விடியுற வர பேசிட்டு இருந்துருப்பாங்க. அவள பார்த்துக்க நாம எதுவும் செய்ய வேண்டியதில்ல, கேஷவ் அவன் இல்லாத அப்போ கூட அவன் வேலைய செய்றான் அதனால அவ தனியாவே இருக்கட்டும். அவங்க போன் பண்ணி ரொமான்ஸ் பண்றத நான் பார்க்க விரும்பல. அதுவும் இல்லாம குறைந்தபட்சம் அவ புருஷன் கூட பேச பால்கனியில இருக்க மாட்டா “ என்று வசுந்தரா சொன்னதை கேட்டு அர்ச்சனா புன்னகைக்க, வசுந்தரா அவளை முறைத்துப் பார்த்துவிட்டு வீட்டுக்கு சென்றார்.

பின்னர் கேஷவின் அழைப்பைக் கேட்டு மைரா எழுந்து அன்றைய நாளுக்குத் தயாரானாள்.

மைராவும் நைனாவும் அகாடமிக்குச் சென்ற போது பாதுகாவலர்கள் அவர்களை வரவேற்றார்கள்.

“எந்த தொந்தரவும் இல்லாம நாம பேசி ரொம்ப நாள் ஆச்சு “ என்று நைனா சொன்னதும், “ நீ சொல்றது சரி தான். நைனா, உண்மைய சொல்லு, க்ரிஷ் பத்தி நான் உன் கிட்ட பேசும் போது உனக்கு வருத்தமா இருந்ததில்லையா ? “ என்று மைரா கேட்டாள்.

“ இல்ல, எனக்கு அவன புடிச்சுது ஆனா உங்க ரெண்டு பேருக்கும் இருந்த உணர்வுகள பத்தி நாம பேசும் போது என் உணர்வுகள நான் வளர விடல. இன்னும் உண்மைய சொல்லனும்னா, அவன் ரோஷினிக்கு ப்ரொபோஸ் பண்ணும் போது எனக்கு அவன் மேல செம்ம கோவம் வந்துச்சு ஆனா அது எனக்காக இல்ல, உனக்காக. நமக்கு எப்போ, யார் மேல லவ் வரணும்னு நாம முடிவு பண்றது இல்ல மைரா, அதுக்கு நாம ரூல்ஸ் எதுவும் போட முடியாது. அது மட்டும் இல்ல, ஒருத்தரோட பயோடேட்டாவ பார்த்துட்டு அவர் லவ் பண்ண நல்லவரா இல்ல கெட்டவரானு தெரிஞ்சிக்க முடியாது. லவ் தானா வரும், அது எனக்கும் வந்துச்சு ஆனா எனக்கு என் மேல எந்த கோவமோ இல்ல வருத்தமோ இருந்தது இல்ல, அவன் மேல அவ்ளோ கோவம் தான் இருந்துச்சு. அன்னைக்கு நான் அவன பூங்காவுல சந்திக்குற வரை அவன அவ்ளோ வெறுத்தேன். அன்னைக்கு நான் அவன ரொம்ப மோசமான சூழ்நிலையில பார்த்தேன், அவன் வாழவே வேணாம்னு முடிவெடுத்து இருந்தான். அவன் எல்லாத்தையும் என் கிட்ட சொன்னான், அப்போ என்னால அவன அப்படி பார்க்க முடியல. எல்லா கோவமும் மறந்து, பல வருஷத்துக்கு முன்னாடி நான் அடக்கி வெச்சுருந்த என் உணர்வுகள் மறுபடியும் உணர ஆரம்பிச்சேன். என் உணர்வுகளுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்குறத விட, அவனோட வாழ்க்கைய மாத்த முடிவு பண்ணி அவனுக்கு சப்போர்ட் பண்ண ஆரம்பிச்சேன் “ என்று சொல்லி நைனா பெருமூச்சு விட்டாள்.

“ இப்போ உங்க வாழ்க்க எப்படி இருக்கு ? “ என்று மைரா கேட்க, “ நல்லா இருக்கு, அவன் கவுன்சலிங் போக ஆரம்பிச்சு இருக்கான். அவன் உண்மையிலேயே முயற்சி செய்றான் “ என்று நைனா மெல்லிய குரலில் கூறினாள்.

“ இத்தன வருஷம் நீ வெயிட் பண்ணிட்டு இருந்துருக்க, அது சீக்கிரம் பலன் கொடுக்கும். இத என் சொந்த அனுபவத்துல சொல்றேன். கொஞ்சம் பொறுமையா இரு, உனக்கு நான் இருக்கேன் “ என்று மைரா சொன்னதும் நைனா மைராவின் உள்ளங்கையைப் பிடித்து அவளைப் பார்த்து புன்னகைத்தாள்.

***************

முன்னோட்டம்:

“ இல்ல டாக்டர், அவன் நல்லா இருக்கான். சொல்லப் போனா இந்த ஏழு நாளா அவன் ஒரு முறை கூட அவன முட்டாள்னு  சொல்லிக்கவே இல்ல. எங்க குடும்பத்துக்காக நாங்க ஒன்னா சேர்ந்து மூணு வேளையும் சமைச்சோம். அவன் ஒரு முறை என்ன நைட்டு டின்னருக்கு கூட்டிட்டு போனான். முதல்ல இருந்தத விட இப்போ அப்பா, அம்மா கிட்ட நிறைய பேசினான். அவன் மறுத்தது நான் கேட்ட சாக்லேட் மட்டும் தான் “

You may also like

Leave a Comment

Latest Posts

error: Content is protected !!