Home FamilyChapter 71

Chapter 71

by Siragugal Novels
9 views

நீண்ட இடைவெளிக்கு பிறகு அலுவலகம் சென்ற ஆர்யன் வீடு  திரும்பி வருவதற்காக ஆவலுடன் சோபாவில் அமர்ந்திருந்தாள் சஞ்சு. புதிய காஸ்மெடிக் வெளியீடு சம்மந்தமான வேலைகள்  போய்க்கொண்டிருக்கின்றன என்பதையும், அதைவிட முக்கியமாக, கடந்த ஒன்றரை மாதங்களாக ஒவ்வொரு கணத்தையும் ஒன்றாகச் செலவிட்ட பிறகு அவன் எப்படி தன்னிடமிருந்து விலகி இருந்தான்  என்பது பற்றியும் அறிய அவள் ஆர்வமாக இருந்தாள்.

அப்போது தான் முன் கதவு திறந்து ஆர்யன் ரஞ்சித்துடன் உள்ளே வர, ரஞ்சித் ஏதோ சொல்ல ஆர்யன் மனம் விட்டுச் சிரித்தான்.

சஞ்சு ஆச்சர்யத்துடன் புருவத்தை உயர்த்தி, ” உங்க பாஸ் இப்படி சிரிக்கிற அளவுக்கு அப்படி என்ன சொன்னீங்க ரஞ்சித் அண்ணா ? “ என்று கேட்டாள். அதற்கு ரஞ்சித் சிரித்தபடி “எல்லாம் உன் பெஸ்ட் ஃப்ரெண்ட் பத்தி தான் சொல்லிட்டு இருந்தேன் ” என்றான்.

சஞ்சு கண் சிமிட்டினாள். “யாருப்பா அது? பவியா இல்ல கீர்த்தியா ?” என்று கேட்டதும், “ கீர்த்தி தான் ” என்றான் ரஞ்சித்.

“அவ என்ன பண்ணா ?” என்று சஞ்சு இப்போது இன்னும் ஆர்வத்துடன் கேட்க, ரஞ்சித் சுவரில் சாய்ந்து கொண்டு, “ மேடம் இப்போலாம் ஒரு மாதிரியா சுத்திட்டு இருக்காங்க “ என்றான். அவன் வார்த்தையை கேட்டு ஒன்றும் புரியாமல், “ ஒழுங்கா சொல்லுங்க அண்ணா “ என்று சஞ்சு வற்புறுத்தினாள்.

” மேடம் இப்போலாம் எப்பவும் வெட்கப்படுறாங்க, ஒரே லவ் தான் “ என்று ரஞ்சித் சொன்னதும், “ என்ன சொல்றீங்க அண்ணா, யார் அந்த அதிர்ஷ்டசாலி ? “ என்று ஆச்சரியத்துடன் கேட்டாள். 

“நம்ம பிரதீப் தான் ” என்று ரஞ்சித் சொல்ல, “ அய்யயோ நெஜமாவா ? “ என்று கேட்டாள், அவள் முகத்தில் பயமும், அதிர்ச்சியும் கலந்திருந்தது.

அவளது எதிர்வினையைக் கவனித்த ஆர்யன் அவள் அருகில் அமர்ந்து, “சஞ்சு, கவலைப்படாத, அவன் இப்போ அதே பழைய பிரதீப் இல்ல. நீ அவன நம்பலாம். அவங்க நல்ல ஜோடியா இருப்பாங்க.” என்று மெதுவாக சொன்னான்.

“ஆனா, அவ என்கிட்ட ஒண்ணும் சொல்லல” என்று சஞ்சு கொஞ்சம் வருத்தத்துடன் சொன்னதும், “ நாம எதையும் அவங்க மேல திணிக்க வேணாம். எல்லாம் தன்னிச்சையா நடக்கட்டும். அவங்களே பேசி அப்புறம் வந்து நம்மகிட்ட சொல்லட்டும், அதுவர வெயிட் பண்ணுவோம் “ என்று ஆர்யன் சொன்னான். சஞ்சுவும் அதற்கு சரி என்று சொன்னாள்.

ரஞ்சித் தலையசைத்துவிட்டு, “சார், நான் கிளம்புறேன் “ என்று சொல்லி புறப்பட்டு சென்றான்.

ரஞ்சித் சென்றதும், ஆர்யன் சஞ்சுவை தன் கைகளில் தூக்கி தங்கள் அறைக்கு அழைத்துச் சென்றான். அவளை வசதியாக மடியில் வைத்துக் கொண்டு சோபாவில் உட்கார்ந்தான்.

“சொல்லு, உன் நாள் எப்படி இருந்துச்சு ? என்ன மிஸ் பண்ணியா ?” என்று மெதுவாக ஆர்யன் கேட்டான். அதற்கு சஞ்சு, “ கொஞ்சம் போரடிச்சுது, உன்ன கொஞ்சம் மிஸ் பண்ணேன் “ என்று பதில் சொன்னாள்.

” கொஞ்சமா தானா ?” என்று கேட்டவன், “ ஆனா நான் உன்ன நிறைய மிஸ் பண்ணேன் ” என்று சொல்லி குனிந்து அவள் காது மடலை மென்மையாக முத்தமிட்டான்.

சஞ்சு லேசாக சிரித்து, “ சரி வேலை எல்லாம் எப்படி நடக்குது ? “ என்று கேட்டதும், “ எல்லாம் சரியா நடக்குது ஆனா என் பொண்டாட்டி பெட் ரூம்ல ஆபீஸ் வேலை பத்தி பேசக் கூடாதுனு சொன்னது எனக்கு ஞாபகம் இருக்கு “ என்று சொல்லி அவள் கன்னத்தை வருடினான்.

“அப்போ நானும் ஆபீஸ் வந்தேன் ஆனா இப்போ நான் வீட்ல இருக்கேன். இப்போ ஆபீஸ்ல என்ன நடக்குதுனு நான் தெரிஞ்சிக்கணும் அதனால கொஞ்ச நேரம் பேசுறதுல எந்த பிரச்சனையும் இல்லை.” என்று சஞ்சு சொல்ல, “ ஒஹ் அப்படியா ? அப்போ நல்லா கேளு, இவ்ளோ நாள் நான் ஆபீஸ் போகமா இருந்த அப்போ கூட பிசினஸ் நல்லா போய்ட்டு இருக்கு. புது காஸ்மெடிக் நல்ல படியா வெளியிடுவோம். அதனால நான் என் பொண்டாட்டி கூட வீட்ல இருக்க முடியும் “ என்றான் ஆர்யன் ஒரு குறும்புச் சிரிப்புடன்.

உடனே அவனை முறைத்த சஞ்சு, “இல்ல, நீ ஆபீஸ் போ “ என்று கூறினாள்.

” சரி, இப்போ சொல்லு, நம்ம குழந்தை எப்படி இருக்கு? நல்லா சாப்பிட்டீங்களா ? இல்ல நீயும், குழந்தையும் பட்டினி கிடந்தீங்களா?” என்று ஆர்யன் கேட்க, “நான் நல்லா சாப்பிட்டேன், நல்லா தூங்கினேன்,” என்று அவள் அவனுக்கு உறுதியளித்தாள்.

” நல்லது, இப்போ நான் என் குழந்தைக்கு முத்தம் கொடுக்கனும் “ என்று புன்னகையுடன் கூறிய ஆர்யன், மெல்ல அவளை தூக்கி கட்டிலுக்கு கொண்டு சென்று படுக்க வைத்து அவளது மேலாடையை கழட்டி அவளது மிருதுவான அடிவயிற்றை குனிந்து மென்மையாக ஒரு முத்தம் கொடுத்தான்.

” ஹாய் பாப்பா, ஸாரி, அப்பா இன்னைக்கு ஆபீஸ் போயிட்டேன். அம்மா மாதிரி நீயும் அப்பாவ மிஸ் பண்ணியா ? லவ் யூ பாப்பா,    அம்மாவ தொந்தரவு பண்ணாதீங்க, சரியா?” என்று அன்போடு பேசி ஆர்யன் மீண்டும் அவள் வயிற்றில் முத்தமிட்டு விட்டு அவள் உதடுகளை முத்தமிட்டான்.

மறுநாள் காலை, ஆர்யன் அலுவலகத்திற்கு தயாராகி, சஞ்சுவுடன் டைனிங் டேபிளில் அமர்ந்து காலை உணவை சாப்பிட்டான். கௌசல்யா தனது வழக்கமான தாய்மையின் அரவணைப்புடன் உணவை பரிமாறினார்.

“சார், நான் உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும் “ என்று கௌசல்யா மெல்லிய குரலில் சொன்னதும், “ “சொல்லுங்க மா ” என்றான் ஆர்யன்.

“சஞ்சுவுக்கு இப்போ அஞ்சு மாசம் ஆயிடுச்சு அதனால் இப்போ ஒரு சின்ன சடங்கு செய்யணும். “ என்று கௌசல்யா சொன்னதும், “ஓ… அப்படியா ? எனக்கு இதெல்லாம் தெரியாது ஆனா எப்போ என்ன செய்யணும்னு நீங்க சொல்லுங்க, ஒன்னு விடாம நாம அதையெல்லாம் செய்யலாம் “ என்று ஆர்யன் உடனே சொன்னான்.

“ அஞ்சாவது மாசம் அம்மா வீட்ல இருந்து செய்யணும் அதனால உங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லனா அவளுக்கு அத நான் செய்யட்டுமா ? “ என்று கௌசல்யா மெதுவாகக் கேட்டார். அதை கேட்டதும் சஞ்சுவின் கண்களில் கண்ணீர் வழிந்தது.

ஆர்யன் அன்பான புன்னகையோடு, “ நீங்க சஞ்சுவ உங்க சொந்த பொண்ணு மாதிரி அக்கறையா பார்த்துக்குறீங்க அதனால அவ உங்க பொண்ணு தான். அவளுக்கு செய்ய நீன்ங்க என் அனுமதி கேட்க வேணாம். என்ன ஏற்பாடு செய்யணும்னு சொல்லுங்க “ என்று கூறினான்.

சஞ்சு எழுந்து நின்று கௌசல்யாவை இறுக்கமாக அணைத்துக் கொண்டாள், அவளது உணர்ச்சிகள் பொங்கி வழிந்தன. “நன்றி,” அவள் கிசுகிசுத்தாள்.

“சஞ்சு, எனக்கு ஏன் நன்றி சொல்ற ? சும்மா இரு “ என்று கௌசல்யா அவள் முதுகில் மென்மையாகத் தட்டிக் கொடுத்தார்.

“ இந்த மாதிரி சடங்கு செய்றது பத்தியெல்லாம் சொல்ல எங்களுக்கு யாரும் இல்ல அதனால நீங்க என்ன சொல்றீங்களோ அத செய்வோம்.” என்று ஆர்யன் கூறியதும், ” சடங்கு செய்ய நான் ஒரு நல்ல நாள் பார்க்குறேன் “ என்று கௌசல்யா சொல்ல, “பாலா உங்களுக்கு எல்லா உதையும் செய்வான். நான் தனிப்பட்ட முறையில ஏதாவது செய்ய வேண்டி இருந்தா சொல்லுங்க “ என்று ஆர்யன் கூறினான். அதற்கு கௌசல்யா உடனே, “இல்ல, நீங்க எதுவும் செய்ய வேணாம். எல்லாத்தையும் நான் பார்த்துக்குறேன். ஏதாவது உதவி தேவைப்பட்டா பாலா கிட்ட கேட்குறேன் “ என்று சொன்னார்.

இறுதியாக புதிய காஸ்மெடிக் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு நாள் கழித்து சடங்கை நடத்த முடிவு செய்தனர்.

ஆர்யன் சஞ்சுவின் நெற்றியில் முத்தமிட்டு விடைபெற்று அலுவலகம் புறப்பட்டான்.

மூன்று நாட்களுக்குப் பிறகு, பிரதீப் தனது வேலையில் பிஸியாக இருந்தான். புதிய தயாரிப்பு வெளியீட்டிற்கான கடைசி நிமிட மாற்றங்களில் கவனம் செலுத்தினான். கதவை லேசாகத் தட்டும் ஓசை அவன் சிந்தனையைக் கலைத்து, அவன் நிமிர்ந்து கீர்த்தியை பார்த்ததும் அவன் மூச்சு ஒரு நொடி பிடிபட்டது.

அவள் ஒரு ஃபைலை கையில் வைத்துக்கொண்டு உள்ளே நுழைந்தாள், அவளுடைய இருப்பு அவனுக்குள் விவரிக்க முடியாத ஆற்றல் அலையை அனுப்பியது. சமீப காலமாக, அவள் அவன் கண்களில் பிரகாசித்துக் கொண்டிருந்தாள், அவள் மீதான அவனது அபிமானத்தை மறைப்பது கடினமாக இருந்தது. தாழ்வாரங்களில் அவர்கள் அடிக்கடி பரிமாறிக்கொண்ட அந்த பார்வைகள், நுட்பமான புன்னகைகள் நாளுக்கு நாள் அதிகரித்தது.

அவனுக்கு எதிரே அமர்ந்திருந்த கீர்த்தி தன் முதுகெலும்பில் ஒரு குளிர் ஓடுவதை உணர்ந்தாள். பிரதீப் இன்னும் அவள் முன்னிலையில் தொலைந்து போயிருந்தான். தொண்டையைக் கனைத்துக் கொண்டு அவள் அவனை அழைத்ததும், ” ஹ்ம்ம்,  சொல்லுங்க கீர்த்தி?” என்று கண் சிமிட்டி தன்னை நிலைப்படுத்திக் கொள்ள முயன்றான்.

” நீங்க கேட்ட ஃபைல் கொண்டு வந்துட்டேன் .” என்று அவள் ஆரம்பித்தாள் ஆனால், கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. இருவரும் லேசாக அந்த இடையூறால் சற்று எரிச்சலடைந்தனர். பிரதீப் அந்த நபரை உள்ளே அழைத்ததும் ஆஷா தனது வழக்கமான பிரகாசமான புன்னகையுடன் ஆஷா உள்ளே நுழைந்தாள்.

பிரதீப்பின் மறுபரிசீலனை தேவைப்படும் சில ஆவணங்களை மாயாவிடம் ஒப்படைத்துவிட்டு, அவனது கையொப்பம் தேவைப்படும் மற்றொரு ஃபைலுடன் நெருங்கினாள். எல்லா நேரங்களை போலவே அவள் ஒரு வசீகர புன்னகையுடன் அவனிடம் பேச முயன்றாள். அதை கவனித்த கீர்த்தியின் முகம் எரிச்சலில் சுருங்கியது.

கீர்த்தியின் முகபாவத்தில் ஏற்பட்ட மாற்றத்தை கவனித்த பிரதீப், லேசாக சிரித்து விட்டு விளையாட முடிவு செய்தான்.

“ஆஷா, இப்போலாம் நீங்க பிஸியா இருக்க மாதிரி தெரியுதே “ என்று பிரதீப் சொன்னதும், “இல்லங்க சார். நான் பெரும்பாலான நேரம் சும்மா தான் இருக்கேன். நீங்க எப்போ வேணும்னாலும் என்ன உதவிக்கு கூப்பிடலாம் “ என்று ஆஷா இனிமையாக பதிலளித்தாள்.

” ஒஹ், ரொம்ப ரொம்ப நன்றி “ என்று பிரதீப் சொன்னான் அதற்கு ஆஷா உடனே, “இந்த சூட்ல எப்பவும் போல அழகா இருக்கீங்க” என்று வெட்கத்துடன் கூற முயன்றாள்.

“தேங்க்யூ ஆஷா. நீங்களும் அழகா இருக்கீங்க “ என்று பிரதீப் சொன்னதும், கீர்த்தியின் முகபாவம் இப்போது எரிமலை வெடிப்பது போன்ற முழு விளிம்பில் இருந்தது. ஆபத்தை உணர்ந்த பிரதீப், ஆஷாவிடம் கையெழுத்திட்ட ஆவணங்களை வாங்கி,  தலையசைத்து அனுப்பினான். அவள் சென்றதும், அவன் கீர்த்தியை நோக்கித் திரும்பி, கவனமாக கண் தொடர்பைத் தவிர்த்து, “ கீர்த்தி…” என்றான் மென்மையாக.

“சார், இந்த ஃபைலை செக் பண்ணிட்டு ஏதாவது மாற்றம் தெரிஞ்சா எனக்கு மெயில் பண்ணுங்க” என்று சொல்லிவிட்டு கீர்த்தி கிளம்ப எழுந்தாள். ஆனால் அவள் அங்கிருந்து நகர்வதற்குள் பிரதீப் அவள்  அவள் மணிக்கட்டைப் பிடித்தான். அவள் திரும்பிப் பார்த்ததும்,  தெளிவாக கோபமடைந்து விலகிச் செல்ல முயன்றாள்.

“கீர்த்தி, ஸாரி ” என்று பிரதீப் கூற, ” என்கிட்டே ஏன் ஸாரி சொல்றீங்க ? ப்ளீஸ் வெயிட் பண்ணுங்க, நீங்க கொஞ்சி பேச ஆஷாவ அனுப்புறேன் “என்று விரக்தியில் நடுங்கும் குரலில் பதிலளித்தாள்.

“கீர்த்தி, நான் சும்மா விளையாடிட்டு இருந்தேன். என்னை மன்னிச்சிடு.” என்று பிரதீப் சொன்னதும், “விளையாடுனிங்களா ? நீங்க விளையாடா நான் தான் கிடைச்சேனா ? நீங்க ஏன் என்கிட்ட  விளையாடனும் ?” என்று கீர்த்தி சீறினாள்.

” நீ இப்படி கோவப்படுறத பார்க்கத் தான் “ என்றான் பிரதீப் சிரித்தபடி.

” எனக்கு ஏன் கோவம் வரும் ? நான் கோவமா இல்ல “ என்று கீர்த்தி சொன்னாள் ஆனால் பிரதீப் அவளிடம், ” இப்போ என்ன பண்ணிட்டு இருக்க ? “ என்று கேட்டான்.

“எனக்கு கோபம் இல்லை.” என்று கீர்த்தி அமைதியாக சொன்னாள். 

“நிஜமாவா?” என்றபடி பிரதீப் அவள் அருகில் சென்றான். அந்த நெருக்கம் அவளை மூச்சை இழுத்துப் பிடிக்க வைத்தது.

“கீர்த்தி, எனக்கு உன்மேல இருக்க அதே உணர்வு உனக்கும் என் மேல இருக்குனு எனக்கு தெரியும். நான் இனி இந்த கண்ணாமூச்சி விளையாட்ட விளையாட விரும்பல. என்னோட கடந்த காலத்துல இருந்து இப்போ வரை என்ன பத்தி எல்லாம் உனக்குத் தெரியும். நான் அப்போ இருந்த அதே பிரதீப் இல்ல, உனக்கும் அது தெரியும். உனக்கு என் மேல நம்பிக்க இருந்தா….எனக்காக உன் கண்கள மூடு, ப்ளீஸ்.” என்று பிரதீப் மெல்லிய குரலில் சொன்னான்.

“நான் உங்கள நம்புறேன்,” என்று கிசுகிசுத்தவள் தன் கண்களை மூடிக்கொண்டாள்.

“இப்போ கண்ண திற ” என்று பிரதீப் சொல்ல, கீர்த்தி கண்களைத் திறந்ததும் மூச்சிரைத்தாள். பிரதீப் அவள் முன் ஒற்றை காலில் மண்டியிட்டு ஒரு சிறிய வெல்வெட் பெட்டியை திறந்து வைத்திருந்தான், அதில் ஒரு அழகான மோதிரம் இருந்தது.

“கீர்த்தி, இத உன்கிட்ட ரொம்ப நாளா சொல்லணும்னு நினைச்சேன். அப்போ என் உணர்வுகள் பத்தி எனக்கு உறுதியாக தெரியல… ஆனா இப்போ, எனக்கு தெரியும், எனக்கு உன்ன ரொம்ப புடிச்சு இருக்கு. என் மனச ஆளுர ஒரே பொண்ணு நீயா தான் இருப்ப. ஐ லவ் யூ  கீர்த்தி. என்ன ஏத்துக்கிட்டு, என்னுடையவளா இருக்க உனக்கு சம்மதமா ? “ என்று பிரதீப் கேட்டதும், அவள் உதடுகள் புன்னகையாக வளைந்து, அவள் கன்னங்களில் கண்ணீருடன் ஆம் என்று தலையசைத்து, “ நானும் உங்கள லவ் பண்றேன் பிரதீப்.” என்று பதிலளித்தாள்.

பிரதீப் அந்த மோதிரத்தை மெல்ல அவள் விரலில் அணிவித்து முத்தமிட்டு, எழுந்து அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டான். இருவரும் சிறிது நேரம் அந்த தருணத்தில் இருந்த பின்னர் கீர்த்தி அவனை விளையாட்டாக தள்ளினாள்.

” முட்டாள். இப்படியா என்ன ப்ரபோஸ் செய்வ ? ஆபீஸ்ல அதுவும் உன் ரூம்ல ? “ என்று கீர்த்தி கேட்டதும், “கீர்த்தி, எனக்கு ஒரு நல்ல கடந்த காலம் இல்லனு உனக்கு தெரியும். நான் உன்ன ப்ரொபோஸ் பண்ண பிளான் பண்ணி ஹோட்டலுக்கு கூப்பிட்டா நீ சங்கடமா உணர்ந்திருந்தா இல்ல என்ன சந்தேகமா பார்த்திருந்தா நான் என்ன செய்றது ? இப்போ நீயும் என்ன லவ் பண்றதா சொல்லிட்ட,   இன்னைக்கு நைட்டு உன்ன வெளிய கூட்டிட்டு போறேன். வேணும்னா மறுபடியும் ப்ரொபோஸ் பண்றேன்.” என்று பிரதீப் கூறினான்.

“முதல் முறை பிரபோஸ் பண்ணியாச்சு, நீ இப்படி பண்ணதுல எனக்கு சந்தோஷம் தான். நைட்டு டின்னருக்கு போவோம். நான் பவிகிட்ட சொல்லனும்.. அவ என்னை ரொம்ப கேவலமா கிண்டல் பண்ணுவா.” என்று கீர்த்தி சொன்னாள். 

“கவலைப்படாத, அவள திருப்பி கிண்டல் செய்ய நான் உனக்கு ஒரு விஷயம் சொல்றேன் “ என்று பிரதீப் சொன்னதும், “ என்ன சொல்ல வர ? “என்று கேட்டாள் கீர்த்தி.

“அவளோட ரகசிய காதலன் யார்னு அவகிட்ட கேளு. அவன் கூட மணிக்கணக்குல போன் பண்ணி பேசுறா அதனால அவ உனக்கு சீனியர் தான் “ என்று சொன்னான் பிரதீப்.

“அடக்கடவுளே! இது உண்மையா?” என்று கீர்த்தி கேட்க, “ஆமா, அது யார்னு இப்போ கேட்காத. சீக்கிரம் தெரிய வரும் “ என்றான் பிரதீப்.

” சரி, அப்புறம் பார்க்கலாம். நைட்டு டின்னருக்கு என்ன வீட்ல இருந்து கூட்டிட்டு போக வா “ என்று சொல்லிவிட்டு கீர்த்தி கிளம்ப எத்தனிக்க, “வேற ஒண்ணுமில்லையா ?” என்று வெட்கத்துடன் கழுத்தை தடவிக் கொண்டே கேட்டான்.

“முதல்ல டின்னருக்குப் போகலாம். இது ஆபீஸ், நாம இங்க ரொமான்ஸ் பண்ண முடியாது. ஆர்யன் அண்ணா என்ன நினைப்பாரு ? சீக்கிரம் எல்லார்கிட்டயும் சொல்லணும் “ என்று கீர்த்தி சொன்னதும், “ நிச்சயம் சீக்கிரம் சொல்லலாம் “ என்றான் பிரதீப்.

அவள் கிளம்பியதும் பிரதீப் மௌனமாக அவள் வெளியேறிய கதவைப் பார்த்துக் கொண்டிருந்தான், அவன் உதடுகளில் புன்னகை தவழ்ந்தது.

“ஐ லவ் யூ கீர்த்தி. நான் உன்ன என் வாழ்நாள் முழுக்க லவ் பண்ணுவேன். உன்ன எப்பவும் சந்தோஷமா வெச்சுக்குவேன். நான் இதுக்கு முன்னாடி நிறைய தப்பு பண்ணி இருக்கேன் ஆனா இப்போ நான் ஒரு உண்மையான வாழ்க்க வாழவும், ஒரு குடும்பத்த உருவாக்கவும் விரும்புறேன். என் வாழ்க்கையில வந்ததுக்கு நன்றி. ” என்று மனதில் நினைத்து புன்னகைத்தான்.

***********

முன்னோட்டம்:

“ இப்பவே செட்டில் பண்ணிடலாம். உங்க பொன்னு இன்னும் ரெண்டு நாளுக்குள்ள நாட்ட விட்டு போகணும் இல்லனா என்கிட்ட ஆதாரங்கள வெச்சு அவள கண்டிப்பா ஜெயிலுக்கு அனுப்புவேன் “

 

 

You may also like

1 comment

Leave a Comment

Latest Posts

error: Content is protected !!