கேஷவ் மற்றும் மைராவின் அறையில், அவள் அவன் தலையை மசாஜ் செய்து கொண்டிருந்தபோது அவனது மொபைல் ஒலிக்க தொடங்கியது. அழைப்பு வருணிடம் இருந்து என்பதை பார்த்து கேஷவ் உடனடியாக பதிலளித்தான்.
“ க்ரிஷோட மொபைல என்ன ஏன் ஹேக் செய்ய வேணாம்னு சொல்ற ? “ என்று கேஷவ் உடனே அவனிடம் கேட்டான் அதற்கு வருண் அவனிடம், “ நான் தான் உங்களுக்காக அத செய்றேனே அப்புறம் ஏன் கவலைப்படுறீங்க ? “ என்று சொன்னான்.
“ சரி ஏதாவது முன்னேற்றம் இருக்கா ? “ என்று கேஷவ் கேட்க, “ “அவளோட லேப்டாப்ல நிறைய படம் இருக்கு ஆனா ரெண்டு ரெட் படம் “ என்றான் வருண்.
“ என்ன வீட்ல வந்து பாரு, வரும் போது லேப்டாப் எடுத்துட்டு வா “ என்று சொல்லி கேஷவ் அழைப்பை துண்டித்தான் ஆனால் மீண்டும் அவனது மொபைல் ஒலிக்கத் தொடங்கியது. இந்த முறை அவன் ஒன்றுமே பேசவில்லை, எதிர் தரப்பில் பேசுவதை மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தான்.
மைரா அந்த அழைப்பு யாரிடம் இருந்து அறிந்து கொள்ள ஆர்வமாக கேஷவ் அழைப்பை துண்டிக்கும் வரை காத்திருந்தாள். கேஷவ் அழைப்பை துண்டித்து அவள் மடியில் தலை சாய்த்தான்.
“ என்ன ஆச்சு, உங்களுக்கு யார் போன் பண்ணது ? “ என்று மைரா உடனே கேட்டாள்.
“ ஒரு முக்கியமான கேஸ் வருது அம்மு, ரொம்ப பெரிய கேஸ். நான் இவ்ளோ நாள் செய்த மாதிரி வீட்ல இருந்து வேலை செய்ய முடியாது. நான் டெல்லி ஆபீஸ்ல இருந்து வேலை செய்யனும் “ என்று கேஷவ் சொன்னதை கேட்டதும், “ அப்போ நீங்க என்ன விட்டு போவீங்களா ஆனா எவ்ளோ நாள் ? “ என்று மைரா பதற்றத்துடன் கேட்டாள்.
“ நான் என்னோட டீம் கிட்ட பேசணும். உனக்கு நாளைக்கு இத பத்தி சொல்றேன். அது இருக்கட்டும் நீ நைனா கிட்ட பேசுனியா ? “ என்று கேட்டான் கேஷவ்.
“ இல்ல, நான் இப்போ அவள பத்தி பேச விரும்பல “ என்று மைரா பதில் கூறினாள்.
“ அவகிட்ட பேசு மா. அவ இங்க ஒரே வீட்ல உன்கூட இருக்குறா, நீ எப்பவும் அவள தவிர்க்க முடியாது. இன்னைக்கு மாதிரி நீ அவள தவிர்க்க ஆரம்பிச்சா உன்ன எல்லாரும் சந்தேகப்படுவாங்க “ என்று கேஷவ் மெல்ல அவளுக்கு புரியவைத்தான்.
“ நான் அவகிட்ட எதையும் மறைச்சது இல்ல, அப்புறம் எப்படி அவளால மறைக்க முடிஞ்சுது ? அவ பெங்களூருக்கு கிளம்புறதுக்கு முன்னாடி நான் அவகிட்ட பேசினேன், ஆனா அவ என்கிட்ட எல்லாத்தையும் மறைச்சுட்டா “ என்று மைரா வருத்தம் கொண்டாள்.
“ அவளுக்கு ஏதாவது காரணம் இருந்துருக்கும், நீ அவகிட்ட பேசினா மட்டும் தான் உனக்கு அது என்னனு தெரியும் இல்ல குறைந்தபட்சம் அவ இத பத்தி அவளே வெளிப்படைய சொல்ல தயாரா இருக்க வர பொறுமையா இரு. அப்புறம் அவங்க மூணு பேருக்கும் நடுவுல என்ன நடக்குதுனு கண்டுபுடிக்க நாம இன்னும் முயற்சி பண்ணிட்டு இருக்கோம் அதனால நம்ம வேலை கெட்டு போற மாதிரி எதுவும் பண்ண வேணாம் “ என்று கேஷவ் அவளுக்கு எடுத்துரைத்தான்.
அவன் சொன்ன வார்த்தைகளை கேட்டு, “ எனக்குத் தெரியும், நான் ஒரு சிபிஐ அதிகாரியோட பொண்டாட்டி, அதனால இந்த மாதிரி கேஸ்ல வேலை செய்றத பத்து நீங்க எனக்கு ஞாபகம் செய்ய வேண்டியதில்ல “ என்று உதட்டை சுளித்தாள் ஆனால் சட்டென அமைதியாகி, “ நீங்க ரொம்ப நாள் போக வேண்டி இருந்தா என்ன செய்றது ? “ என்று அவனிடம் மெல்லிய குரலில் கேட்டாள்.
“ அந்த வேலைய சீக்கிரம் முடிக்க என்னால முடிஞ்ச வரை முயற்சி செய்வேன் ஆனா ஒருவேள நான் கொஞ்ச நாள் போக வேண்டி இருந்தா நமக்கு நிறைய நினைவுகள் தேவைனு நினைக்குறேன். உன்னோட பிறந்த நாளுக்கு அப்புறம் நமக்குள்ள ஒண்ணுமே நடக்கல அம்மு “ என்று கேஷவ் அவளிடம் கூறினான்.
“ நான் உங்க கிட்ட லவ் சொல்லி ப்ரொபோஸ் பண்ண அப்புறம் நீங்களும் என்ன லவ் பண்றதா சொல்லுவீங்க அப்போ நைட்டு முழுக்க கொண்டாடுவோம்னு நெனச்சேன். இப்போ சொல்லுங்க இது யாரோட தப்பு ? “ என்று மைரா கேட்டாள்.
“ அது என் தப்பு தான் ஆனா நான் உன்ன ப்ரொபோஸ் பண்ணிட்டேன், நீயும் எனக்கு ப்ரொபோஸ் பண்ணிட்ட அப்போ நாம இத ரெட்டிப்பா கொண்டாடி இருக்கணும் ஆனா உன்னோட வருத்தம் எனக்கு புரியுது அதனால நீ இப்போ என்ன ப்ரொபோஸ்ப் பண்ணு நானும் லவ் பண்றேன்னு பதில் சொல்றேன் “ என்று கேஷவ் யோசனை சொன்னான்.
“ நான் உங்கள ஸ்பெஷலா லவ் சொல்லி ப்ரொபோஸ் பண்ண விரும்பினேன், அதனால நீங்க எதிர்பார்க்காத நேரத்துல அத செய்வேன், ஆனா இப்போதைக்கு நாம கொண்டாடுவோம் “ என்று சொல்லி மைரா அவனை பார்த்து கண்ணடித்தாள்.
கட்டிலில் அமர்ந்திருந்த மைரா கீழே இறங்கி தரையில் உட்கார்ந்திருந்த கேஷவின் மடியில் அமர்ந்தாள். அவள் தன் விரல்களால் அவன் தலைமுடியை கோதிவிட்டு, அவன் உதடுகளின் ஓரத்தில் முத்தமிட தொடங்கினாள். கேஷவ் அவளது தொடைகளையும் கழுதைக் கன்னங்களையும் வருடியபடி முத்தத்தை அனுபவித்துக் கொண்டிருந்தான், ஆனால் மைரா அவன் உதட்டைக் கடித்ததும் திடீரென்று வலியில் துடித்தான்.
“ என்ன லவ் பண்றதா சீக்கிரமே சொல்லாததுக்கு தண்டனை இது “ என்று சொல்லி கட்டை விரலாலும் ஆள்காட்டி விரலாலும் அவன் உதடுகளை பிடித்து மைரா லாவியதும் கேஷவ் தன் உடலில் ஹார்மோன்களின் உந்துதலை உணர்ந்தான்.
“ இந்த உலகத்துலேயே நான் தான் ரொம்ப அதிர்ஷ்டசாலி. இவ்ளோ அழகான, செக்ஸியான புருஷன் கெடச்சு இருக்காரு. உங்கள மொத்தமா சொந்தமாக்கி வெச்சுருக்கேன். நான் சொல்றது சரி தானே கேஷவ் “ என்று மைரா ஹஸ்கி குரலில் சொல்ல, “ நான் உனக்கு மட்டுமே சொந்தம் மைரா “ என்றான் கேஷவ்.
அவன் ஒரு கையால் அவள் இடுப்பை கசக்கி கொண்டே மறு கையை அவள் சட்டைக்குள் நுழைத்து அவளது மென்மைகளை கசக்கியதும் மைரா அவன் உதடுகளை விடுவித்தாள். கேஷவ் தன் நாவை அவள் உதடுகளின் மேல் வட்டமிட்டபடி மைராவைப் பார்த்து சிரித்தான். அவள் உதடுகளில் இருந்து முனகல் வெளிவராமல் இருக்க அவள் உதடுகளை கடித்துக் கொண்டாள்.
“ இப்படி உன் உதடுகள கடிக்காத அம்மு, நான் மட்டும் தான் கடிக்க உரிமை இருக்கு. நீ நல்ல பொண்ணா இல்ல கெட்ட பொண்ணா மைரா? “ என்று கேஷவ் கேட்டதும், மைரா அவன் காதருகே சாய்ந்து அவன் காது மடலை மெல்ல லாவி, “ நான் ரொம்ப ரொம்ப கெட்ட பொண்ணு “ என்று சொன்னாள்.
“ அப்போ கெட்ட பொண்ண தண்டிக்கணும். நீ தண்டனைக்கு தயாரா? “ என்று கேட்டவன் அவளது சட்டையை கிழித்து அவளது ஆடைகளுக்கு சுதந்திரம் அளித்தான். அவன் எதுவும் செய்யாமல் அவளை பார்த்துக் கொண்டிருப்பதை கண்டு மைராவுக்கு வெட்கமாக இருந்தது. அவனது தீவிரமான பார்வையை தாங்க முடியாமல் அவள் நகர்ந்து செல்ல முயன்றாள், ஆனால் கேஷவ் அவள் கைகளைப் பிடித்து அவன் கழுத்தைச் சுற்றி வளைத்து அவளை அருகில் இழுத்தான்.
அவனது உள்ளங்கைகள் அவள் முதுகில் மேலும் கீழும் உரச, மைரா அவனது தலைமுடியை தன் முஷ்டியால் பிடித்து அவன் தலையை சாய்த்து ஆக்ரோஷமாக முத்தமிட்டாள். கேஷவ் உள்ளுக்குள் சிரித்தபடி தன் உள்ளங்கையை அவள் முன் பக்கம் நகர்த்தி அவளை மெல்ல தொட ஆரம்பித்தான். கேஷவ் அவள் கால்களை தன் இடுப்பை சுற்றி வளைத்து கொண்டு அவளை தூக்கி கொண்டு எழுந்து முத்தமிடுவதை நிறுத்தாமல் அவளை கட்டிலில் படுக்க வைத்தான்.
இருவரும் முத்தத்தில் இருந்து பின்வாங்கிய போது, கேஷவ் அவளை பார்த்து, “ வேற பொசிஷன்ல ட்ரை பண்ணலாமா? “ என்று புன்னகையுடன் கேட்டதும், மைரா இன்னும் மூச்சிரைக்க தலையை ஆட்டினாள்.
ஒரு புன்னகையுடன் அவளை புரட்டி பின்னாலிருந்து அவளை அணைத்தான். மைரா போர்வைகளை இறுகப் பற்றிக் கொள்ள, கேஷவ் அவள் முதுகில் சாய்ந்து முத்தமிட்டான்.
மைரா அவன் பெயரை முனகிக்கொண்டே இருந்தாள், இருவரும் உச்சத்தை அடைந்து அவன் அவளைத் தன் கைகளில் ஏந்திக்கொண்டான், அவர்களின் உடல்கள் நடுங்க, இருவரும் மூச்சிரைக்க படுக்கையில் விழுந்தனர். கேஷவ் அவள் முகத்தில் இருந்த தலைமுடியை விலக்கி அவள் கன்னத்தில் ஒரு முத்தம் வைத்தான்.
“ எனக்கு மட்டும் எதாவது ஸ்பெஷல் பவர் இருந்தா உன்ன வேற ஒரு கிரகத்துக்கு கூட்டிட்டு போய் உன்ன என் கைக்குள்ளேயே வெச்சுருப்பேன் “ என்று கேஷவ் சொன்னதை கேட்டு, “ அப்போ சாப்பாடும் குளியலும் எங்க செய்றது ? “ என்று கேட்டாள் மைரா.
“ நாம கொஞ்சம் கின்கியா இருக்கலாம், நீ என்ன டாடி சொல்லி கூப்பிடு, நான் உனக்கு சாப்பாடு ஊட்டுறேன், குளிப்பாட்டுறேன், உன்ன முழுசா கவனிச்சுக்குறேன். ஒரு நிமிஷம் இரு, நான் இப்பவே அதெல்லாம் பண்ணலையா? “ என்று கேஷவ் குறும்பு சிரிப்போடு கேட்க, “ நிச்சயமாக டாடி, அய்யோ நான் உங்கள அப்படி கூப்பிட மாட்டேன் “ என்று முகத்தை வேடிக்கையாக சுளித்தாள்.
அவள் முக ரியாக்ஷனை பார்த்து கேஷவ் சத்தமாக சிரித்தபடி அவளை தன் பக்கம் திருப்பி அவள் கன்னத்தில் தன் உதடுகளை பதித்தான்.
“ நீ என்ன வேணும்னாலும் கூப்பிடு, நான் உன் மேல எவ்ளோ ஆசையா இருப்பேன்னு உனக்கு புரியும் “ என்று கேஷவ் சொன்னதும், மைரா அவனை பார்த்து, “ அங்கிள் “ என்று அழைத்தாள்.
“ ஏய் அம்மு, நீ அந்த வார்த்தைய மறந்துட்டனு நெனச்சேன் ஆனா நீ ரொம்ப மோசமானவ, இந்த முறை நான் உன்ன கண்டிப்பா தண்டிக்க தான் போறேன் “ என்று சொன்ன கேஷவ் அவளை தன் கையால் பூட்டி அவளை கிச்சுகிச்சு மூட்ட ஆரம்பித்தான். மைரா அவன் பிடியில் இருந்து விடுபட துடித்தாள், அவள் அவன் கன்னத்தில் கடிக்க ஆரம்பித்த பிறகே அவன் அவளை விடுவித்தான். கேஷவ் முழங்கையை ஊன்றி கண்ணாடியைப் பார்த்து கன்னத்தில் தழும்பை கொடுத்ததுக்கு மைராவை முறைத்தான்.
“ ஐ லவ் யூ கேசவ், இப்ப என்ன முறைக்காதீங்க. உங்க அப்பாவியான, அழகான, செக்ஸியான பொண்டாட்டிய மன்னிச்சிடுங்க “ என்று மைரா சொன்னதும், அவள் வார்த்தைகளைக் கேட்டு புன்னகைத்த கேஷவ் பதிலுக்கு ஐ லவ் யூ என்று முணுமுணுத்தபடி அவள் நெற்றியில் முத்தமிட்டான்.
காலையில் கண்விழித்த மைரா கேஷவின் வெற்று மார்பில் தன் கன்னம் பதிந்திருப்பதை கவனித்தாள். அவளது அசைவுகளை உணர்ந்த கேஷவ் கண்களைத் திறந்து அவள் கூந்தலில் முத்தமிட்டான்.
“ இன்னைக்கு நீங்க என்ன போறீங்க ? “ என்று மைரா கேட்க, “ எனக்கு மீட்டிங் இருக்கு மா, சில அவசர வேலையெல்லாம் கவனிக்க வேண்டி இருக்கு ஆனா நான் வீட்ல இருந்து தான் வேலை செய்வேன் “ என்று கேஷவ் பதில் கூறினான்.
“ நான் ரெண்டு நாளா அகாடமிக்கு யாரும் போகல அதனால இன்னைக்கு நான் போகணும். சாயங்காலம் லேட்டா வருவேன் “ என்று மைரா சொன்னதும், “ எல்லாரும் ஷாப்பிங் போவாங்க, அவங்களோட போக உனக்கு இஷ்டமில்லையா? “ என்று கேஷவ் கேட்டான்.
“ இல்ல, எல்லா உண்மையும் தெரியுற வர நான் அவங்க கூட இருக்க விரும்பல. கெட்சப் நம்ம புது வீட்ட பத்தி நம்ம அப்பா, அம்மாவுக்கு சொல்லணும். அவங்களோ இல்ல மத்தவங்க சொல்லி அவங்க தெரிஞ்சிக்குறதுக்கு முன்னாடி நாம சொல்லணும் “ என்று மைரா சொல்ல, “ அப்படியே செய்யலாம், நீயும் நானும் மட்டும் கொஞ்ச நாள் நம்ம வீட்ல இருப்போம். நாம கொஞ்ச சந்தோஷமா கொண்டாடுவோம், நாம இன்னும் புதுசா கல்யாணம் ஆனவங்க தான் அத மறந்துடாத அதனால நீ எனக்காக மட்டும் வேணும் “ என்றான் கேஷவ்.
“ நீங்க என்ன அகாடமிக்கு கூட்டிட்டு போய் அப்புறம் திரும்பவும் சாயங்காலம் கூட்டிட்டு வர முடியுமா ? “ என்று மைரா கேட்டதும், “ உனக்காக எது வேணும்னாலும் செய்றேன் “ என்றான் கேஷவ்.
அவன் சொன்னதைக் கேட்டு புன்னகைத்த மைரா, தன் உடலை மறைக்க போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டு தயாராக பாத்ரூமுக்கு சென்றாள். அவள் சமையலறையை அடைந்த போது நைனாவும், அர்ச்சனாவும் காலை உணவைத் தயாரித்துக் கொண்டிருந்தனர். நைனா மைராவைப் பார்த்து புன்னகைத்தாள், அர்ச்சனாவிடமிருந்து எந்த கேள்வியும் கேட்க வேண்டாம் என்பதற்காக, மைராவும் நைனாவை பார்த்து புன்னகைத்தாள்.
“ அம்மா, நான் கொஞ்ச நாளா அகாடமிக்கு போகல அதனால உங்க கூட ஷாப்பிங் வர மாட்டேன் “ என்று மைரா சொன்னதும், “ மைரா, இன்னைக்கு ஒரு நாள் இருக்க முடியுமா? “ என்று அர்ச்சனா கேட்டார்.
மைரா பதில் சொல்வதற்குள் நைனா குறுக்கிட்டு, “ பரவாயில்ல அத்த, அகாடமியில நிறைய வேலை குவிஞ்சு இருக்கு நானும் கடந்த ரெண்டு நாளா பிஸியா இருந்துட்டேன் அதனால மைரா வேலைய பாக்கட்டும், நாம ஷாப்பிங் போகலாம். நான் சீக்கிரம் எல்லாமே செலெக்ட் பண்ணிடுவேன் “ என்று நிலைமையை சமாளித்தாள்.
கேஷவ் அர்ச்சனாவையும் மதனையும் கூப்பிடும் சத்தம் கேட்டு அனைவரும் ஹாலில் கூடினர்.
“ என்ன ஆச்சு கேஷவ்? நீ ஏதாவது சொல்ல விரும்புறியா ?” என்று மதன் கேட்டதும், “ ஆமா பா, ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும். நான் சொல்றத கேட்டு நீங்க எல்லாரும் என்ன தப்பா நினைக்க கூடாது, நான் அத விரும்பவும் இல்ல “ என்று கேஷவ் சொன்னதும், “ கேஷவ் “ என்று அர்ச்சனா குழப்பத்தோடு அவனை அழைத்தார்.
“ நான் ரொம்ப தனிமைய விரும்புற ஆளா இருந்தேன்னு உங்க எல்லாருக்கும் தெரியும், அதனால போன வருஷம் நான் சென்னையில இருக்கும் போது தங்கி வேலை செய்ய ஒரு வீட்ட கட்டினேன். அது ரொம்ப தூரம் இல்ல, நம்ம வீட்ல இருந்து ஒரு 45 நிமிஷத்துல போயிடலாம். தயவு செஞ்சு நான் நம்ம வீட்ட விட்டு போக நினைக்குறதா யாரும் நினைக்காதீங்க. இப்போ எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு, எப்போவாச்சும் என் மனைவி கூட கொஞ்ச தனிமையா இருக்க விரும்புறேன் “ என்று கேஷவ் சொல்லி முடித்ததும், மைராவுக்கு புரை ஏறி, தொண்டை அடைத்துக்கொண்டு அவனை முறைத்தாள், ஆனால் அவன் தோள்களைக் குலுக்கிக்கொண்டு தனது பேச்சைத் தொடர்ந்தான்.
“ இதுவர நான் அங்க இருந்து தான் என் வேலைய செஞ்சுட்டு இருக்கேன் “ என்று கேஷவ் சொன்ன பிறகு, “ உனக்காக கட்டினியா ? “ என்று அர்ச்சனா கேட்டார்.
“ அப்படியெல்லாம் இல்ல, அப்பா கிட்ட இருந்து நான் கத்துக்கிட்டேன். அவர் உங்களுக்காக இந்த வீட்ட கட்டினாரு மா, நீங்க ரெண்டு பேரும் பல நினைவுகள இந்த வீட்ல உருவாக்கி இருக்கீங்க, நானும் என் வாழ்க்கையில அத செய்ய விரும்பினேன் “ என்று கேஷவ் விளக்கம் கொடுத்தான்.
“ நல்ல யோசன தான், அப்போ உங்க புது வீட்ட பார்க்க எப்போ போகலாம் ? “ என்று அர்ச்சனா கேட்டதும் குறுக்கிட்ட மதன், “ அர்ச்சனா, அவன் சொன்னத கேட்கலையா ? அவனுக்கு நினைவுகள் தேவ, அதனால அவன் மைராவ முதல்ல கூட்டிட்டு போகட்டும், அது தான் சரியாக இருக்கும். கொஞ்ச நாள் கழிச்சு நாம போவோம் “ என்று கூறினார்.
“ ரொம்ப தேங்க்ஸ் அப்பா “ என்று சொல்லிவிட்டு கேஷவ் மைராவைப் பார்த்து கண்ணடித்தான், அது அனைவரின் கண்களிலும் இருந்து மறையவில்லை. மைரா வெட்கப்பட்டு அர்ச்சனாவின் கையை பிடித்துக் கொண்டு அவருக்கு பின்னால் தன்னை மறைத்துக் கொண்டாள்.
“ உங்க ஹனிமூன் காலத்த நல்லா அனுபவியுங்க “ என்று அர்ச்சனா மைராவின் காதில் முணுமுணுக்க, மைரா மேலும் கிண்டலுக்கு ஆகாமல் இருக்க சமையலறைக்கு ஓடினாள். நைனா அவளைப் பின்தொடர்ந்து மைராவின் கைகளை புன்னகையுடன் தட்டினாள்.
“ என்ன நடக்குது? கடந்த முறை நீ ரொம்ப மன அழுத்தமாவும், வருத்தமாவும் இருந்த, ஆனா இப்போ உன்னோட வெட்கம் அப்புறம் உன் புருஷன் உன்ன பார்த்து கன்னடிக்குறது எல்லாம் வேற கதை சொல்லுது. நீ உன்னோட லவ் பத்தி அவர்கிட்ட சொல்லிட்டியா ? அவர் என்ன சொன்னாரு ? “ என்று நைனா ஆர்வமுடன் கேட்டாள்.
“ என் வாழ்க்கையில நிறைய நடந்துச்சு, அப்புறம் கடைசியா எனக்கு தெரிஞ்சு நீ சிங்கிலா தான் இருந்த, அத பத்தி ஏதாவது சொல்ல விரும்புறியா ? “ என்று மைரா அவளிடம் கேட்டாள்.
“ மைரா, என்ன ஆச்சு ? நீ ஏன் என்கிட்ட தெளிவா பேச மாட்டேங்குற ? “ என்று நைனா குழப்பத்துடன் கேட்டாள்.
“ கெட்சப் தான் இத்தன வருஷமா பரிசுகளையும் பூக்களையும் அனுப்பி வச்சிருக்காரு, ஆனா அது க்ரிஷ்னு நான் தப்பா நினைச்சுட்டேன். கெட்சப் தான் எனக்காக ஒவ்வொரு முறையும் சண்ட போட்டு இருக்காரு, நான் அவர லவ் பண்ணி இருக்கேன் ஆனா அது க்ரிஷுனு நெனச்சு ஒரு மாயையில வாழ்ந்து இருக்கேன். நான் லவ் பண்ண ஆரம்பிக்குறதுக்கு முன்னாடியே கெட்சப் என்ன பல வருஷமா லவ் பண்ணிட்டு இருந்துருக்காரு. நாங்க ரெண்டு பேரும் லவ் சொல்லி ப்ரொபோஸ் பண்ணிட்டோம். “ என்று சொன்ன மைரா, “ இப்போ சொல்லு நீ ஏதாவது சொல்ல விரும்புறியா ? “ என்று அவளிடம் கேட்டாள்.
“ நீ க்ரிஷ் பத்தி கேட்குறதா இருந்தா சீக்கிரமே நாங்க எல்லாத்தையும் உன்கிட்ட சொல்லுவோம் “ என்று நைனா சொல்ல, “ இது அவன பத்தி இல்ல. நான் உன் கிட்ட கேட்குறேன், நீ சொல்ல வேண்டியது ஏதாவது இருக்கா ? “ என்று மைரா மீண்டும் அவளிடம் கேட்டாள்.
“ இல்ல, நீ என்கிட்ட இருந்து என்ன எதிர்பார்க்குறனு எனக்குப் புரியல” என்று நைனா சொன்னதும் மைரா விரக்த்தியில் தலையை அசைத்துவிட்டு சமையலறையை விட்டு வெளியேறினாள். நைனா கண்களில் கண்ணீர் பெருகுவதை உணர்ந்து தன் அறைக்கு விரைந்தாள். அழைப்பில் இருந்த க்ரிஷ் நைனாவை கண்ணீருடன் பார்த்ததும் அழைப்பை துண்டித்து விரைந்து சென்று அவள் தோள்களைப் பற்றினான்.
“ என்ன ஆச்சு? ரோஷினி உன்னை மறுபடியும் காயப்படுத்தினாளா? “ என்று க்ரிஷ் கேட்டதும், “ மைரா, வருத்தமா இருக்கா, என்கிட்ட சரியா பேசவே இல்ல. அது எனக்கு ரொம்ப வலிக்குது க்ரிஷ் “ என்று நைனா சொன்னதும், “ என்னாலையா ? நம்ம கல்யாணம் தான் காரணமா? “ என்று க்ரிஷ் கேட்டான்.
“ இல்ல, அவ மனசுல என்ன பத்தி ஏதோ இருக்கு அது என்னனு என்னால யூகிக்க முடியல” என்று நைனா அழுதாள்.
க்ரிஷ் அவள் கண்ணீரைத் துடைத்து அவளுக்காக கொஞ்சம் தண்ணீரை ஊற்றினான்.
“ எல்லாம் சரி பண்ணிடுவோம் அதனால கவலைப்படாத. அவங்க இன்னைக்கு புது வீட்டுக்கு போவாங்கனு நினைக்குறேன். இப்போதைக்கு அது நம்ம எல்லாருக்கும் நல்லது. நம்ம எல்லாருக்கும் கொஞ்சம் நேரம் கிடைக்கும் அப்புறம் ரோஷினிக்கு எதிரா ஆதாரங்கள சேகரிக்க நாம ஒரு வழிய கண்டுபுடிக்கலாம் இல்ல குறைந்தபட்சம் அவள நம்ம வீட்ல இருந்து துரத்தலாம் “ என்று க்ரிஷ் சொன்னதை கேட்டு நைனா அவனை ஆச்சரியமாக பார்த்தாள்.
“ நம்ம வீடா ? இது என் வீடா க்ரிஷ் ?” என்று நைனா கேட்க, “ நிச்சயமா நைனா, நீ மைராவோட பெஸ்ட் ப்ரெண்ட், இப்போ என் மனைவி, அதனால இந்த குடும்பத்துல நீயும் ஒருத்தி, உனக்கு இந்த வீட்ல எல்லா உரிமையும் இருக்கு “ என்றான் க்ரிஷ்.
“ இப்படி கொஞ்ச நாளா உணர்ச்சிகரமா இருக்குறதால நீ குறைந்தபட்சம் எனக்கு கொஞ்சம் சாக்லேட் இல்ல ஐஸ்கிரீம் வாங்கித் தரலாம் “ என்று நைனா சலித்திக் கொண்டாள்.
“ நான் ஒரு முறை 2 பொண்ணுங்களுக்கு ஐஸ்கிரீம் அப்புறம் சாக்லேட் வாங்கி கொடுத்து தப்பு பண்ணிட்டேன் ஆனா அது இன்னைக்கு எல்லாரோட வாழ்க்கையிலையும் சந்தோஷத்த பறிக்குது அதனால ஐஸ்கிரீம் அப்புறம் சாக்லேட் பத்தி நெனச்சா எனக்கு பயமா இருக்கு. நீ என்ன நம்ப மாட்ட, ஆனா நான் இப்போ கிட்டத்தட்ட ஒரு வருஷமா ஐஸ்கிரீம், சாக்லேட் சாப்பிடவே இல்ல “ என்று க்ரிஷ் சொன்னதும் நைனா அதிர்ச்சியானாள்.
அவர்கள் பேசிக் கொண்டிருந்த போது ஹாலில் ஏதோ சலசலப்பு சத்தம் கேட்டு அவர்கள் அறையை விட்டு வெளியேறினர்.
*****************************************
முன்னோட்டம்:
“ நல்ல ஆரோக்கியமான மன நிலையில இருக்கவங்க இத எப்படி செய்ய முடியும்னு நினைக்குறீங்க ? ரோஷினி வருத்தமா இருக்கா ஒத்துக்குறேன் ஆனா நைனாவ காயப்படுத்த அவளுக்கு யார் உரிமை கொடுத்தது? விசாரணைக்கு அவ சென்னையில தங்க வேண்டியிருந்தா அப்போ அவளோட friends வீட்ல இல்ல லேடீஸ் ஹாஸ்டல் பார்த்து தங்குறது தான் நல்லது “

1 comment
[…] 74. நல்ல பொண்ணா இல்ல கெட்ட பொண்ணா […]