க்ரிஷ் திருமணத்திற்கு ப்ரொபோஸ் செய்வதை பார்த்த ரோஷினி அவனை கட்டிப்பிடித்து ஆம் என்று கத்தினாள். க்ரிஷ் அவளை தூக்கி சுழற்றிய பின்னர் மோதிரத்தை அவள் விரலில் அணிவித்தான். அர்ச்சனாவும் வசுந்தராவும் மைராவுக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லாமல் அருகில் நின்றார்கள். ராஜனும் மதனும் கோபத்தில் கொந்தளித்துக் கொண்டிருந்தனர், ஆனால் மைரா எதிர்வினையாற்ற வேண்டாம் என்று சைகை செய்ததைக் கண்டு உணர்ச்சியற்றவர்களாக நின்றனர்.
க்ரிஷ் ரோஷினியை டேபிளுக்கு இழுத்து சென்று கேக்கை வெட்டினான். மைரா மற்றும் ரோஷினியைத் தவிர வேறு யாரும் அவனது பெற்றோர் கூட அவனை வாழ்த்தவில்லை. க்ரிஷ் முதல் துண்டை ரோஷினிக்கு ஊட்டிவிட்டு, மைராவுக்கு உணவளிக்க ஒரு துண்டை எடுத்தான் ஆனால் அவள் அதை அவள் கையில் பெற்றாள்.
“ நீ என் அதிர்ஷ்ட தேவத மைரா. இது உனக்கு அதிர்ச்சியாவும், ஆச்சரியமாவும் இருக்கும்னு எனக்குத் தெரியும், இத உன் கிட்ட மறைச்சதுக்கு என்ன மன்னிச்சிடு. ரோஷினி தான் இது ஒரு ரகசியமாக இருக்க விரும்பினா அதுவும் இல்லாம எனக்கும் சில காரணம் இருந்துச்சு அதனால ப்ளீஸ் என் மேல வருத்தப்படாத மைரா, என்ன மன்னிச்சிடு “ என்று க்ரிஷ் கெஞ்சினான். அதற்கு மைரா புன்னகைத்து கொண்டே, “ எனக்கு உன் மேல கோபம் இல்ல க்ரிஷ், நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். ரெண்டு பேரோட ஜோடி பொருத்தம் ரொம்ப நல்லா இருக்கு. ஒரு வழியா என்னோட முட்டாள் friend வாழ்க்கையில ஒருத்தர் வந்தாச்சு. இப்போ சொல்லுங்க எவ்ளோ நாளா இத என்கிட்ட மறைச்சு வச்சிருக்கீங்க? “ என்று கேட்டாள்.
க்ரிஷ் தலையை சொரிந்து கொண்டே, “ ரெண்டு வருஷமா. நான் முதல்ல இது ஒரு ஈர்ப்பு தான்னு நெனச்சேன் ஆனா அதுக்கு அப்புறம் தான் நான் இவள லவ் பண்றேன்னு உணர்ந்தேன். உண்மைய சொல்லனும்னா ரோஷினிய பார்க்க நான் பெங்களூர் போவேன். எனக்கு முன்னாடி ரோஷினி தான் எனக்கு ப்ரொபோஸ் பண்ணா, நானும் சம்மதம் சொல்லிட்டேன். ஆனா இந்த அழகான பொண்ணை கல்யாணத்துக்கு ப்ரபோஸ் பண்றது நானா இருக்கணும்னு நினைச்சேன். ரோஷினி எனக்கு கெடச்சுதுக்கு நான் அதிர்ஷ்டசாலி, சரி தானே மைரா? “ என்று க்ரிஷ் பேசிக் கொண்டே இருந்தான்.
“ கண்டிப்பா க்ரிஷ். ரோஷினி ரொம்ப அழகா இருக்கா, உனக்கு ரொம்ப பொறுத்தமா இருக்கா “ என்று மைரா சொன்னதும் க்ரிஷ் அவளை கட்டிப்பிடித்தான், அவள் புன்னகையுடன் அவன் முதுகில் தட்டினாள், ஆனால் அவளது உடலின் ஒவ்வொரு எலும்பிலும் அவள் உணர்ந்த வலியை அவளால் கட்டுப்படுத்த முடியவில்லை. அவள் தனது வேதனையை வெளியேற்ற கத்தி அழ விரும்பினாள், ஆனால் அவளால் அதைச் செய்ய முடியாமல் தவித்தாள்.
மைரா கேக்கை வெட்டி அவர்களின் பெற்றோருக்கும் ரோஷினியின் பெற்றோருக்கும் பரிமாறினாள். வேதனையான ஒரு மணி நேரம் முடிவுக்கு வந்து க்ரிஷ் ரோஷினியை ஒரு நீண்ட பயணத்திற்கு வெளியே அழைத்துச் செல்ல முடிவு செய்தபோது, வசுந்தரா பின்தொடர மைரா தனது அறைக்குத் சென்று கதவை மூடினாள். அவளுடைய தாயின் அணைப்பில் தரையில் விழுந்து அழுதாள். இடைவிடாத வலியாலும் வேதனையாலும் மைரா அலறியபோது வசுந்த்ரா பீதியடைந்து தன் மகளை மார்போடு அணைத்து முதுகில் தட்டிக் கொடுத்தாள்.
பல வருட காதல், ஒவ்வொரு அணைப்பு, முத்தம் எல்லாம் ஒரு முகப்பாக மாறியது. மைராவின் உடல் முழுவதும் கூர்மையான வலியைத் தவிர வேறெதுவும் உணரவில்லை. வலி தாங்க முடியாமல் பிரமை பிடித்துக் கொண்டாளா? நடந்தது எல்லாம் கனவா? அவன் அவளை நேசிக்கவில்லையா? இன்று எதுவாக இருந்தாலும் அவள் காதலை இழந்தாள். அவள் தனது சிறந்த நண்பனை இழந்தாள். அவள் கனவை இழந்தாள். அவள் தன் உயிரை இழந்தாள் என்று அவள் நினைத்தாள் ஆனால் அது தான் உண்மையா ?
கதவு பலமாகத் தட்டப்படும் சத்தம் வசுந்த்ராவின் கவனத்தை ஈர்த்து, மைராவை சுவரில் சாய்ந்து கொள்ள வைத்துவிட்டு அவர் கதவைத் திறந்தார். ராஜன் அறைக்குள் நுழைய அவரைத் தொடர்ந்து வந்த மதன் தடுமாறி தரையில் சரிந்து, உடைந்த நிலையில் இருந்த மைராவின் முகம் முழுவதும் கண்ணீருடன் இருப்பதை பார்த்தார். தன் சொந்த மகளாக பாவித்த பெண்ணை இப்படி பார்த்த மதன் நெற்றியில் அடித்துக் கொண்டார். ராஜன் எந்த உணர்ச்சியும் வெளிபடுத்தாமல் கையில் தண்ணீர் டம்ளருடன் மைராவின் அருகில் அமர்ந்தார்.
“ மைரா, செல்லம் நீ அழறத நான் தடுக்க மாட்டேன், ஆனா முதல்ல இந்த தண்ணிய குடி. எனக்காக ப்ளீஸ் “ என்று சொல்லி ராஜன், கண்ணாடியின் விளிம்பை அவள் உதடுகளில் வைத்தார். மைரா தண்ணீரை குடித்த சில நொடிகளில் மைராவின் கண்கள் இருண்டு உறங்கினாள். தூங்கிவிட்டாள்.
“ என் பொண்ணுக்கு என்ன ஆச்சு? “ என்று வசுந்தர பதற்றத்துடன் கேட்க, “ நான் அவ தூங்க மாத்திரை கொடுத்தேன். என்னால அவள இப்படி பார்க்க முடியாது. அவ இப்போ தூங்கட்டும், காலையில இத பத்தி பேசுவோம். அவளோட வலியில இருந்து வெளிய வர நேரமும், தைரியமும் வேணும் “ என்று ராஜன் சொல்ல, “ மன்னிச்சிடு, ராஜன், என்ன நம்பு, மைரா என் பொண்ணும் தான். இந்த நாள் பார்ப்போம்னு எனக்குத் தெரியாது. அவன இன்னைக்கு நான் கொன்னுடுவேன் “ என்று சொல்லி மதன் மைராவின் உடைந்த நிலையை தாங்க முடியாமல் தன் வீட்டிற்கு விரைந்து ஹாலில் வசுந்தரா, அவரது அண்ணன், அண்ணி ஆகியோரைப் பார்த்தார்.
“ உங்களுக்காக தான் வெயிட் பண்றேன் மதன், நீங்க இல்லாம நான் இவங்கள எதுவும் கேட்க விரும்பல “ என்று அர்ச்சனா சொன்னதும், “ க்ரிஷ் இன்னைக்கு ரோஷினிய ப்ரபோஸ் செய்யப் போறான்னு உங்களுக்கு தெரியுமா? “ என்று கோவமுடன் கேட்டார் மதன்.
“ ஆமாம், க்ரிஷ் எங்கள பார்ட்டிக்கு கூப்பிட்டான் ஆனா அவன் ப்ரொபோஸ் பண்ணதுக்கு நீங்க ஏன் இப்படி அதிர்ச்சியா இருக்கீங்க ? நம்ம பசங்களுக்கு கல்யாணம் நடக்குறது உங்களுக்கு பிடிக்கலையா? “ என்று ரோஷினியின் தந்தை கேட்டார் அதற்கு அர்ச்சனா, “ உங்களுக்கு முன்னாடியே தெரியும்னா ஏன் எங்களுக்கு சொல்லல ? “ என்று கேட்டார்.
“ இது சர்ப்ரைஸா இருக்கனும்னு க்ரிஷ் விரும்பினான், அவங்க லவ் பண்றது உங்களுக்கு தெரியும்னு நான் நெனச்சேன் “ என்று ரோஷினியின் தந்தை சொன்னார் அதை கேட்டதும், “ அவங்க ஏற்கனவே லவ் பண்ணிட்டு இருந்தாங்களா ? என்ன சொல்றீங்க ? “ என்று அதிர்ச்சியோடு கேட்டார் அர்ச்சனா.
“ ஏன் இப்படி ஷாக் ஆகுறீங்க ? அவங்க ரெண்டு வருஷமா லவ் பண்றாங்கனு உங்களுக்கு தெரியாதா ? மாசத்துக்கு ரெண்டு முறை அவன் ரோஷினிய பார்க்க பெங்களூர் வருவான், அப்போ எங்க வீட்ல தான் தங்கி இருந்தான். அவள கல்யாணம் பண்ண என் அனுமதி கேட்டான், அவன் என் மருமகன் அப்படி இருக்கும் போது நான் ஏன் மறுக்கனும் ? “ என்று ரோஷினியின் தந்தை சொன்னார்.
“ ரெண்டு வருஷமா? “ என்று அதிர்ச்சியடைந்த அர்ச்சனாவும், மதனும் மற்றொரு குரலைக் கேட்டனர், வசுந்த்ராவை தங்கள் வீட்டு வாசலில் இருந்து எதுவும் பேசாமல் திரும்பி செல்வதை பார்த்தார்கள்.
“ ரெண்டு வருஷமா ரோஷினிய பார்க்க வந்திருக்கான், ஆனா எங்க கிட்ட சொல்ல உங்களுக்கு தோணலையா ? ஒருமுறை கூட எங்க கிட்ட இத பத்தி பேசனும்னு தோணவே இல்லையா ? “ என்று அர்ச்சனா வேதனையுடன் கேட்க, “ அர்ச்சனா, இப்ப தெளிவா சொல்லுங்க. உனக்கு இதுல சந்தோஷம் இல்லையா? என்று கேட்டார் ரோஷினியின் அம்மா.
“ எங்க பையன் வாழ்க்கையில என்ன நடக்குதுனு தெரியாம ஒரு மூணாவது மனுஷங்க மாதிரி இன்னைக்கு நாங்க வேடிக்க பார்க்காம எங்க கிட்ட ஏற்கனவே இத பத்தி சொல்லி இருந்தா நாங்க சந்தோஷப்பட்டு இருப்போம். ஒருவேள அப்பா அம்மாவ விட நீங்க ரெண்டு பேரும் ரொம்ப நல்லவங்கனு நெனச்சு க்ரிஷ் எங்க கிட்ட இருந்து எல்லாத்தையும் மறச்சிட்டான் போல “ என்று மதன் மனம் உடைந்து சொன்னார்.
க்ரிஷ் மற்றும் ரோஷினி வீட்டிற்குள் நுழைந்ததும், க்ரிஷ் தனது பெற்றோரின் வார்த்தைகளைக் கேட்டு அதிர்ச்சியடைந்தார்ன்
“ அப்பா, என்ன சொல்றீங்க? நீங்க தான் உலகத்துலையே சிறந்த அப்பா அம்மா “ என்று க்ரிஷ் சொல்ல, அதற்கு மதன், “ ஒஹ்ஹ அப்படியா ? அதனால தான் எங்கள விட உன் மாமா அத்த ரொம்ப முக்கியனும்னு நெனச்சு அவங்க கிட்ட எல்லாத்தையும் சொன்ன போல ? “ என்று ஏளனம் செய்தார்.
“ அப்பா, நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க. காரணம் அது இல்ல. மைரா…” என்று க்ரிஷ் ஆரம்பித்ததும், “ அவ பெயரை சொல்லாத முட்டாள். நான் உன்ன கொன்னுடுவேன் “ என்று அர்ச்சனா சீறினார்.
தன் பெற்றோர் கோவப்படுவதை பார்த்து “ அம்மா இப்ப ஏன் கோபப்படுறீங்க? தயவு செஞ்சு நான் சொல்றத கேளுங்க. மைராவுக்கு ரோஷினி கூட பிரச்சினை இருந்துச்சு, நாங்க ஒன்னா இருக்குறது அவளுக்கு புடிக்கல. இருந்தும் என்னால ரோஷினிய லவ் பண்றத நிறுத்த முடியல அதனால இத மைரா கிட்ட இருந்து மறைக்க வேண்டியிருந்துச்சு. நான் உங்க கிட்ட சொல்லி இருந்தா நீங்க அத உடனே அவகிட்ட சொல்லி இருப்பீங்க, அதனால உங்க கிட்டயும் சொல்லாம இருந்துட்டேன் “ என்று க்ரிஷ் தன்னை நியாயப்படுத்தினான்.
“ அப்புறம் ஏன் இன்னிக்கு வெளிப்படுத்தின ? “ என்று மதன் கத்தியதும், “ அப்பா புரிஞ்சிக்கோங்க, எப்படியும் ஒரு நாள் நான் இத செய்ய வேண்டியிருந்துச்சு, இன்னைக்கு ஸ்பெஷலா இருக்கும்னு நெனச்சேன். உங்க பிரச்சின என்னனு எனக்கு புரியல? “ என்றான் க்ரிஷ்.
“ அண்ணா இத பத்தி யோசிக்க எங்களுக்கு நேரம் வேணும் அதனால நீங்க காலையில கிளம்புறது நல்லது “ என்று அர்ச்சனா இறுதியாக சொன்னதும், “ அம்மா, நான் ஒரு வாரம் மாமா வீட்ல தங்கலாம்னு இருக்கேன். ரோஷினிய கல்யாணம் பண்ணிக்க சொல்லி கேட்ட அப்புறம் அவள தனியா விட எனக்கு விருப்பமில்லை, அதனால அவங்க கூடவே கார்ல போறேன் “ என்று க்ரிஷ் கூறினான்.
அவன் சொன்னதை கேட்டு முறைத்த அர்ச்சனா, “ அவங்க தனியா வந்தாங்க, அவங்களுக்கு போக வழி தெரியும்னு நான் நம்பறேன், இல்ல உன் மாமா, அத்தையோட சேர்ந்து எல்லாத்தையும் தனியா உன் விருப்பபடி செய்யணும்னு நீ பிளான் பண்ணி இருந்தா அப்போ எங்க வாழ்க்கையில இருந்து நிரந்தரமா போயிடு “ என்று தீர்க்கமாக சொன்னார்.
ரோஷினியும் அவளது பெற்றோரும் ஒரு வார்த்தை பேசாமல் அறைக்கு சென்றனர், க்ரிஷ் தனது பெற்றோர் ஏதாவது சொல்வார்கள் என்று காத்திருந்தான், ஆனால் அவர்கள் உணர்ச்சியற்று இருந்தபோது அவனும் தனது அறைக்கு சென்றான்.
ஆறுதல் சொல்ல காரணமோ வார்த்தைகளோ இல்லாத மதனின் தோளில் சாய்ந்து அர்ச்சனா ஆவேசமாக அழுதாள். அவரும் மைராவுக்காக அழுதார், இருவரும் இரவு முழுவதும் விழித்திருந்து, காலையில் ரோஷினியும் அவளது பெற்றோரும் வெளியேறுவதைப் பார்த்தனர். க்ரிஷ் அவர்களை வெளியே அழைத்துச் சென்று கண்களில் கண்ணீருடன் இருந்த ரோஷினியை கட்டிப்பிடித்தான்.
“ நாம ஒன்னா இருக்குறதுல அவங்களுக்கு சந்தோஷம் இல்லனு நினைக்குறேன் க்ரிஷ் “ என்று ரோஷினி சொன்னதும், “ இல்ல ரோஷினி, நான் அவங்க கிட்ட இருந்து எல்லாத்தையும் மறச்சிட்டேன்னு வருத்தத்துல இருக்காங்க. அவங்க எனக்கு friend மாதிரி இருந்தாங்க அபப்டி இருந்தும் நான் அவங்க கிட்ட மறைச்சிட்டேன். இத நான் மைராகிட்ட இருந்தும் மறச்சிட்டேனு வருத்தப்படுறாங்க. மைரா என்னோட பெஸ்ட் friendனு உனக்கு தெரியும், நான் அவ கிட்ட இருந்தும் எதுவம் மறைச்சது இல்ல அதனால நான் மைராவ காயப்படுத்திட்டேன்னு நெனச்சு இருப்பாங்க. நான் அவங்க கிட்ட பேசுறேன். சீக்கிரம் நம்ம கல்யாண தேதியை முடிவு செய்வோம் “ என்று க்ரிஷ் அவளை சமாதானம் செய்தான்.
“ ஐ லவ் யூ க்ரிஷ், நான் உன்ன நம்புறேன் “ என்று ரோஷினி சொல்ல, “ ஐ லவ் யூ ரோஷினி, உன்ன கூட்டிட்டு வர சீக்கிரம் வரேன் “ என்றான் க்ரிஷ்.
மைரா தன் படுக்கையறையில் இருந்து அவர்களைப் பார்ப்பதை கவனிக்காமல் ரோஷினியின் உதட்டில் க்ரிஷ் முத்தமிட்டான். மைரா கண்ணீரை அடக்க முடியாமல், அவள் உதடுகள் துடித்தன, கண்ணீர் அவள் கன்னங்களை நனைத்தது.
ஹாலுக்குள் நுழைந்த க்ரிஷ், அர்ச்சனா தன் தந்தைக்கு டீ பரிமாறுவதைப் பார்த்தான்.
“ அம்மா, நீங்க மாமா, அத்தை கிளம்புறதுக்கு முன்னாடி அவங்க கிட்ட பேசி இருக்கலாம். நான் லவ் பண்றத உங்க கிட்ட இருந்து மறைச்சதுக்கு கோவம் இருந்தா என்ன தண்டிச்சு இருக்கலாம் ஆனா அவங்கள ஏன் ? “ என்று க்ரிஷ் கோவத்துடன் கேட்டதும், க்ரிஷின் கழுத்தை நெரிக்க வேண்டும் என்ற வெறியை அடக்கி கொண்டிருந்த மதன் கோப்பையை சுவரில் வீசி எறிந்தார். அதோடு க்ரிஷை நோக்கி ஓடி சென்று அவனை இடைவிடாமல் அறைந்தார், அப்போதும் அர்ச்சனாவுக்கு அவரைத் தடுக்கவில்லை.
“ அம்மா, இப்படி அடிக்குற அளவுக்கு நான் என்ன பண்ணேன் ? அப்பா என்ன அடிக்குறத நீங்க வேடிக்க பார்க்குறீங்க ? “ என்று க்ரிஷ் கவலையுடன் கேட்க, “ அவர் உன்ன அடிக்க மட்டும் தான் செஞ்சாரு நான் உன்ன கொன்றிருப்பேன். அண்ணனும் அவர் குடும்பமும் கிளம்புற வரை வெயிட் பண்ணிட்டு இருந்தேன். உன் மாமனார், மாமியார், முக்கியமாக உன் வருங்கால மனைவி முன்னாடி உன்ன அவமானப்படுத்த நாங்க விரும்பல “ என்று அர்ச்சனா சீறினார். .
“ நான் கல்யாணத்துக்கு ரெடியா இருக்கேன்னு நீங்க சந்தோஷப்படுவீங்கன்னு நினைச்சேன். உங்களுக்கு நான் கல்யாணம் பண்ணிக்க வேண்டாமா ? “ என்று க்ரிஷ் கேட்டதும், “ உனக்கு கல்யாணம் நடக்கனும்னு ஆசைப்பட்டேன், ஆனா ரோஷினியோட இல்லா, மைரா கூட. நான் எப்பவும் மைராவ என் மருமகளா, என் வீட்டுக்கு வரணும்னு விரும்பினேன், நாங்க எல்லாரும் நீ மைராவ லவ் பண்றனு நெனச்சோம், ரோஷினிய இல்ல “ என்று இறுதியாக அர்ச்சனா உண்மையை வெளிப்படுத்தினார் ஆனால் அதை கேட்ட க்ரிஷ், “ மைராவ நான் லவ் பண்றேனா ? என்ன உளறுறீங்க ? அவ என் பெஸ்ட் பிரெண்ட். நாங்க ஒன்னா வளர்ந்தோம். நான் மைராவ லவ் பண்ணுவேன்னு எப்படி நெனச்சீங்க ? நான் அவள அக்கறையா பார்த்துகிட்டேன், பாதுக்காத்தேன், அன்பா இருந்தேன் ஆனா அதுக்கு காரணம் அவ என் பிரெண்ட், அது மட்டும் தான் வேற எதுவும் இல்ல “ என்று சொன்னான்.
க்ரிஷ் பேசியதும் அர்ச்சனா அவனுக்கு கொடுத்த அறையின் பலத்துடன் அவன் முகம் பக்கவாட்டில் திரும்பியது.
“ வாய்ப்பு கிடைக்குற அப்போலாம் பிரெண்ட யார் கட்டிப்புடிப்பாங்க ? நீ அவள சொந்தம் கொண்டாடின மாதிரி ஏன் அவளுக்கு முத்தம் கொடுத்த ? “ என்று மதன் கொந்தளித்தார். அதற்கு க்ரிஷ், “ நாங்க சந்திச்ச நாள்ல இருந்து நான் அத செய்றேன் “ என்று திக்கி தடுமாறினான்.
“ அப்போ நீ வளர்ந்த அப்புறம் நிறுத்தியிருக்கனும். நீ அவளுக்கு வாழ்க்கையில ஒரு நம்பிக்கைய கொடுக்குறனு தோணலையா ? உன் இஷ்டத்துக்கு அவள கடிப்புடிக்குறது, முத்தம் கொடுக்குறத மத்தவங்க பார்க்கும் போது அவள பத்தி என்ன நினைப்பாங்க ? “ என்று சொன்னார் மதன்.
“ மைராவுக்கு அதுல ஒரு பிரச்சனையும் இல்ல, அப்புறம் ஏன் இத நீங்க இப்படி பெருசு பண்றீங்க ? “ என்று க்ரிஷ் கேட்க, “ நாங்க பெருசு பண்றோமா ? இதுல அந்த அப்பாவி பொண்ண பத்தி கொஞ்சம் நெனச்சு பார்த்தியா ? நீ இப்படி அவள கட்டிப்புடிச்சது, முத்தம் கொடுத்தது எல்லாம் தெரிஞ்சா அவள யாரு கல்யாணம் பண்ணுவாங்க ? அவ வாழ்க்க என்னவாகும்? நீ அவள காலேஜுக்கு ட்ராப் பண்றது, அவளை பிக் அப் பண்றது, ஐஸ்கிரீம் பார்லருக்கு கூட்டிட்டு போறது எல்லாத்தையும் இங்க இருக்குற பெரும்பாலானவங்க பார்த்திருக்காங்க. ஒருத்தன் தான் லவ் பண்ற பொண்ணுக்கு செய்ற எல்லாத்தையும் நீ பண்ணி இருக்க “ என்று அர்ச்சனா யதார்த்தத்தை வெளிப்படுத்தினார்.
“ நீ மைராவ லவ் பண்றதா நாங்க எல்லாரும் நெனச்சோம். வார்த்தைகள விட உன்னோட செயல்கள் சத்தமா பேசும், அத தான் நீ பண்ணி இருக்க. உன்னோட செயல் எல்லாமே நீ அவள லவ் பண்றதுக்கு ஆதாரமா இருந்துச்சு. இன்னைக்கு இல்ல, நேத்து இல்ல 8 வருஷமா நீ மைராவ ப்ரொபோஸ் பண்ணுவனு வெயிட் பண்ணிட்டு இருந்தோம். இப்போ திடீர்னு ரோஷினிய கல்யாணம் பண்ண சொல்லி கேட்டுருக்க “ என்று மதனும் விளாசினார்.
“ நீ ரோஷினிக்கு ப்ரொபோஸ் பண்ண அப்புறம் தான் நீங்க ரெண்டு பேரும் ரெண்டு வருஷமா லவ் பண்றீங்க, நீ பெங்களூர் போனது கூட வேலை விஷயமா இல்ல அவள பார்க்க தான்னு எங்களுக்கு தெரியுது “ என்று அர்ச்சனா சொல்ல, அவரை தொடர்ந்து மதனும், “ நீ முன்னாடியே இதெல்லாம் சொல்லி இருந்தா இவ்ளோ பிரச்சன வந்துருக்காது. ராஜனையும் வசுந்த்ராவையும் நான் எப்படி எதிர்கொள்வேன்? அவங்க ரெண்டு பேரும் எங்கள நம்பி அவங்க ஒரே பொண்ண இங்க அனுப்புனாங்க, நான் உன்ன நம்பி என் பொண்ண உன்கூட இருக்க விட்டேன் ஆனா நீ எல்லாரையும் உடைச்சிட்ட “ என்று நொந்து போனார்.
“ உன்ன என் பையன்னு சொல்லவே வெட்கமா இருக்கு, குறைந்த பட்சம் கேசவ் உன்னை விட எவ்வளவோ மேல், ஒரு பொண்ணோட வாழ்க்கைய கெடுக்காம ஒதுங்கி இருந்துட்டான் ஆனா நீ ? எங்க முன்னாடி வராத “ என்று சொல்லி அர்ச்சனா அழ ஆரம்பித்தார்.
“ நான் மைராவுக்கு தப்பா நம்பிக்க கொடுத்தேனா ? நீங்க என்ன சொல்றீங்க ? மைரா என்ன லவ் பண்றாளா ? “ என்று க்ரிஷ் அதிர்ச்சியில் கேட்கும் போது, ஏற்கனவே பலத்த சத்தம் கேட்டு வந்த மைரா எல்லாவற்றையும் கேட்டு சுவற்றில் சாய்ந்து கண்ணீரை அடக்க முயன்று கொண்டிருந்தாள். அவளைப் பின்தொடர்ந்த அவளது பெற்றோர் எல்லாவற்றையும் கேட்டு ஏமாற்றமடைந்தனர்.
வசுந்தரா மைராவின் கையை பிடித்து அந்த இடத்தை விட்டு வெளியேற இழுக்க, மைரா மறுத்து முகத்தைத் துடைத்துக் கொண்டு அவர்களைப் பார்த்து புன்னகைத்தவிட்டு வீட்டுக்குள் நுழைந்தாள்.
மதனும் அர்ச்சனாவும் அவளைப் பார்க்க வெட்கப்பட்டு தலை குனிந்தனர். மைரா மதனின் அருகில் அமர்ந்து அவர் தோளில் கை போட்டாள்.
“ என்ன நடக்குது இங்க? கல்யாணத்துக்கு தேதி பாத்தாச்சா ? “ என்று மைரா கேட்டதும், “ மைரா, நீ என்ன லவ் பண்றியா ? “ என்று சட்டென கேட்டான் க்ரிஷ். அவனது நேரடியான கேள்வியைக் கேட்டு மைரா திகைத்துப் போனாள், ஒரு நிமிடம் கழித்து அவள் சத்தமாக சிரித்தாள். உணர்ச்சிகளை மறைத்து அவள் செய்த அற்புத செயலை அனைவரும் பார்த்தனர்.
“ அய்யோ கடவுளே ! க்ரிஷ் உனக்கு ஏன் இந்த எண்ணம் வந்துச்சு ? உன்ன நான் லவ் பண்ணுவேனா ? சீக்கிரம் கல்யாணம் பண்ணிட்டு போடா லூசு. பாவம் ரோஷினி, வாழ்க்க முழுக்க உன் கிட்ட மாட்டி கஷ்டப்பட போறா “ என்று சொல்லி மைரா சாதாரணமாக எப்போதும் போல அவனை கிண்டல் செய்ததும் க்ரிஷ் சற்று நிம்மதியடைந்தான்.
“ அம்மாவும் அப்பாவும் நான் ரெண்டு வருஷமா ரோஷினிய லவ் பண்றேன்னு அவங்க கிட்ட இருந்து மறைச்சதுக்கு என்ன ஒதுக்கி வைக்க நினைக்குறாங்க போல. சத்தியமா உன்ன காயப்படுத்தனும்னு நினைக்கல. இப்போ நம்ம கல்யாண வயசுல இருக்குறதால தான் எல்லாத்தையும் சொன்னேன், எனக்கு வேற வழி இல்ல. என் மேல ரொம்ப வருத்தமா இருக்கியா மைரா? உன்னை காயப்படுத்தனும்னு நான் எப்பவும் நெனச்சது இல்ல, ஒரு நாளும் அப்படி செய்யமாட்டேன் “ என்று க்ரிஷ் வருத்தமாக பேசினான்.
தன் உணர்வுகளை திடப்படுத்திக்கொண்டு, “ ஆமாம் க்ரிஷ், நீ என்ன ஒருநாளும் காயப்படுத்த மாட்ட, எனக்கு உன் மேல எந்த வருத்தமும் இல்ல “ என்று சொன்ன மைரா, “ நீ என்ன காயப்படுத்திட்டேன்னு சொன்னா அது ரொம்ப சாதாரணமா இருக்கும் ஆனா நான் உன்ன லவ் பண்ணது உன் தப்பு இல்லையே “ என்று மனதில் நினைத்துக் கொண்டாள்.
“ அம்மா கேட்டீங்களா? ப்ளீஸ் மா, நீங்களும் அப்பாவும் என் வாழ்க்கையில நான் விரும்பினது எல்லாம் பண்ணி இருக்கீங்க அதுக்கு நான் எப்பவும் நன்றியோட இருப்பேன். இப்போ கடைசியா ஒரு முறை என்ன மன்னிச்சு என்னையும் ரோஷினியையும் ஏத்துக்கோங்க “ என்று க்ரிஷ் மன்றாடினான்.
உடைந்து போனாலும் சம்மதம் சொல்லுமாறு தலையை அசைத்த மைராவைப் பார்த்தார் அர்ச்சனா. மதன் அங்கிருந்து கிளம்ப முயன்றார், ஆனால் மைரா அவர் தோளை அழுத்தி மென்மையாகத் தட்டினாள். மதனுக்கு அவளது சைகை புரிந்ததும் சரி என்று தலையை அசைத்தார். அவரைத் தொடர்ந்து அர்ச்சனா சரி முணுமுணுக்க, க்ரிஷ் தன் அம்மாவை கட்டிப்பிடித்து நன்றி சொன்னான்.
இவ்வளவு நேரமும் மௌனமாக இருந்த வசுந்தராவும் ராஜனும் தொண்டையைக் கனைத்துக் கொள்ள, க்ரிஷ் தன் கவனத்தை அவர்கள் பக்கம் திருப்பி, “ வசு அத்த, ராஜன் மாமா நீங்க என் மேல வருத்தமா இருக்கீங்களா? “ என்று கேட்டான். உடனே அவர்களின் பார்வை மைராவைச் சந்தித்தது, அவள் கண்களால் அவர்களிடம் கெஞ்சினாள். ராஜன் தனது கோபத்தை வெளிப்படுத்த குறைந்தபட்சம் திட்ட விரும்பினார், ஆனால் அர்ச்சனா மற்றும் மதனின் முகத்தில் இருந்த தோற்றம், மைரா மீதான அவர்களின் அன்பு மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக மைராவின் கெஞ்சல் ஆகியவை அவரை உருக்கியது, எல்லாவற்றிற்கும் மேலாக தனது மகளுக்காக எதையும் செய்ய தயாராக இருந்தார்.
ராஜன் க்ரிஷின் தலையைத் தொட்டு இல்லை என்று தலையை அசைக்க, க்ரிஷ், “ ரொம்ப தேங்க்ஸ் மாமா “ என்று புன்னகைத்தான்.
“ மைரா, போகலாம். உனக்கு வேலைக்கு போக நேரமாகுது “ என்று வசுந்தரா சொன்னதும், “ நான் அவள டிராப் பண்றேன் அத்த “ என்றான் க்ரிஷ் ஆனால் ராஜன் மறுத்து, “ இல்ல க்ரிஷ், எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு, அதுக்கு மைரா வேணும், அதனால அவள நான் கூட்டிட்டு போறேன் “ என்று கூறினார்.
மைரா எழுந்து தன் பெற்றோருடன் சேர எத்தனிக்க, க்ரிஷ் அவளைத் தடுத்தான். அவன் அவளை அணைக்க நகர்ந்தான், ஆனால் வசுந்தரா க்ரிஷை கட்டிப்பிடித்து அவன் கன்னத்தை வருடி விட்டு மைராவை தன்னுடன் அழைத்து சென்றார்.
**************************************
முன்னோட்டம்:
“என்ன அங்கிள் சொல்லாம கெட்சப் சொல்லி கூப்பிடுற அதனால உனக்கு தான் உடம்பு சரி இல்லனு நினைக்குறேன். ஆனா இனி நீ என்ன அங்கிள் சொல்லி கூப்பிட மாட்டணு நம்புறேன் ஏன்னா நான் உனக்கு புடிச்ச பாடகரோட மியூசிக் நிகழ்ச்சிக்கு பாஸ் வாங்கிட்டு வந்துருக்கேன் “

1 comment
[…] மைரா, நீ என்ன லவ் பண்றியா ? […]